ஸ்பிரிட்டட் யூத்ஸ் கால்பந்து கழக பொன்விழா, மற்றும் புத்தக வெளியீட்டு விழா - அமைச்சர் மேயர் பங்கேற்பு.!


தூத்துக்குடி மாநகரில் ஐம்பது ஆண்டுகள் வெற்றிகரமாக பயணித்து சாதனைகள் பல படைத்துள்ள ஸ்பிரிட்டட் யூத்ஸ் கால்பந்து கழக பொன்விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியானது தூத்துக்குடியில் நேற்று பாஸ்கரா திருமண மஹாலில் வைத்து நடைபெற்றது.


பொன்விழா மற்றும் புத்தக வெளியீட்டு விழாவிற்கு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு ஐம்பது ஆண்டுகள் வெற்றிகரமாக பயணித்து சாதனைகள் பல படைத்துள்ள ஸ்பிரிட்டட் யூத்ஸ் கால்பந்து கழக பொன்விழா மலர் புத்தகத்தை வெளியிட்டார்.  மேயர் ஜெகன் பெரியசாமி அதை பெற்றுக் கொண்டார்.


இறுதியில் கால்பந்து வீரர், வீராங்கனைகளுக்கு அமைச்சர் கோப்பை மற்றும் நினைவு பரிசுகள் வழங்கி கால் பந்தாட்ட வீரர்களுக்கு கௌரவிக்கப்பட்டது

 


நிகழ்ச்சியில் துணை மேயர் ஜெனீட்டா செல்வராஜ், மாநகர செயலாளர் ஆனந்த சேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்