திருப்பூர் மாவட்ட தடகளத்தில் ஃப்ரண்ட்லைன் மிலேனியம் பள்ளி மாணவர்கள் சாதனை

திருப்பூர் சகோதயா பள்ளிகளுக்கான தடகள விளையாட்டுப் போட்டிகள் டீ பப்ளிக் பள்ளியில்இரண்டு நாட்கள் நடைபெற்றது. 

இப்போட்டியில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இப்போட்டியானது 10 வயதுக்குட்பட்டோர் முதல் 19 வயதுக்குட்பட்டோர் வரை நடைபெற்றது.

 இப்போட்டியில் ஃப்ரண்ட்லைன் மிலேனியம் பள்ளியைச் சார்ந்த மாணவ, மாணவியர் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி வாகைச் சூடினர். 10 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் தனிஷ் 10 புள்ளிகளும், 16 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் ஜோ ஜெஃப்ரி 14 புள்ளிகளும் பெற்று தனி நபர் சாம்பியஷிப் பட்டத்தை வென்று சாதனை புரிந்தனர். 

மேலும் 19 வயதுட்பட்டோருக்கான போட்டியில் மாணவர் சண்முகம், உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல் மற்றும் 400மீ, 800மீ என அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று பதக்கங்களை வென்றார். 10 வயதுக்குட்பட்டோர் முதல் 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் உயரம் தாண்டுதல், நீளம் தாண்டுதல், வட்டு எறிதல் மற்றும் 100மீ, 200மீ, 400மீ, 600மீ மற்றும் 800மீ ஓட்டம் முதலான போட்டிகளில் மாணவ, மாணவியர்கள் 8 தங்கம், 5 வெள்ளி மற்றும் 11 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்கள் பெற்றனர். 

அதேபோல் 14, 16 மற்றும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் பிரணவ் 155செ.மீ, ஜோ ஜெஃப்ரி 159செ.மீ, சண்முகம் 175செ.மீ உயரம் தாண்டி முந்தைய சாகோதயா சாதனையை முறியடித்தனர். இவ்வாறு பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பள்ளிக்குப் பெருமை சேர்த்த மாணவ, மாணவிகளையும் அதற்கு உறுதுணையாக இருந்த விளையாட்டு ஆசிரியர்கள் நந்தகுமார் மற்றும் ராஜலட்சுமி ஆகியோர்களை பள்ளியின் தாளாளர் டாக்டர் சிவசாமி, செயலாளர் டாக்டர். சிவகாமி, இயக்குநர் சக்தி நந்தன், துணைச்செயலாளர் வைஷ்ணவி நந்தன் மற்றும் முதல்வர் லாவண்யா ஆகியோர் பாராட்டினர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!