பண்ணைக்குட்டையில் மூழ்கி சிறுவன் பலி... காப்பாற்ற சென்ற தாயும் பலியான பரிதாபம்

 குட்டை நீரில் வழுக்கி விழுந்த மகனை காப்பாற்ற சென்ற போது மகனுடன் சேர்ந்து தாயும் பரிதாபமாக பலியானார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கோவிந்தாபுரம் கிராமம் சின்னக்கம்பாளையம் பிரிவு அருகே விவசாய தோட்டத்தில் வசிப்பவர் சக்திவேல் (வயது 35).  இவரது மனைவி கலாமணி (27)  இவர்களுக்கு வினூதட்சன்  என்ற  ஒன்பது வயது மகன் உள்ளார் வினு தட்சன் கோவிந்தாபுரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறான். 

இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் காலை இவர்களது விவசாயத் தோட்டத்தில் செயற்கையாக அமைக்கப்பட்டிருந்த விவசாய பாசன நீர் குட்டையில் இயங்கிக் கொண்டிருந்த மின்மோட்டாரை ஆப் செய்வதற்காக கலாமணியும் மகன் வினுதட்சன் சென்றனர்.

 அப்போது வினுதட்சன் பண்ணை குட்டையின் சுவர் மீது ஏறி உள்ளே எட்டிப் பார்த்தபோது தவறி தண்ணீரில் விழுந்தார். இதை பார்த்த கலாமணி மகனைக் காப்பாற்ற அவரும் நீர் குட்டையில் உள்ளே இறங்கினார். இதில் தாய் மகன் இருவரும் நிலை தடுமாறி குட்டை நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

 சம்பவத்தை சிறிது தொலைவில் இருந்து தண்ணீர் பாய்ந்து கொண்டிருந்த சக்திவேல் பார்த்துவிட்டு இருவரையும் காப்பாற்ற விரைந்து ஓடி வந்தும் உயிருடன் மீட்க இயலாமல் போனது. இருவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக பலியாகினர். சம்பவம் பற்றி அறிந்ததும் தாராபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தாய் மகன் இருவரது பிரேதங்களையும் கைப்பற்றி தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரத பரிசோதனைக்காக அனுமதித்துள்ளனர்

8 அடி உயரம் உள்ள தண்ணீரே தேக்கி வைத்த பண்ணை நீர் குட்டையில் தாயும் மகனும் நீரில் மூழ்கி பரிதாபமாக பலியான சம்பவம் அப்பகுதி கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

-மோகன்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!