மது போதையில் அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் மீது போலீசார் வழக்கு பதிவு.!

 

தூத்துக்குடியில் மது போதையில் அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். 

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள கட்டாரி மங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ண ராஜா (39). இவர் தூத்துக்குடி அரசு போக்குவரத்து கழக புறநகர் டிப்போவில் டிரைவராக பணி புரிந்து வருகிறார். இவர் 22-ந்தேதி இரவு தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு பஸ்சை ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது அவர் குடிபோதையில் இருந்ததாக தெரிகிறது

இதை அறிந்த பயணிகள் அரசு போக்குவரத்து கழக அதிகாரியிடம் செல்போனில் புகார் அளித்தனர். உடனே அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் ராமகிருஷ்ண ராஜா ஓட்டிச் சென்ற பஸ்சை, புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் அருகே நிறுத்தி பயணிகளை வேறு பஸ்சில் அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக ராமகிருஷ்ண ராஜா மீது புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் டிப்போ மேனேஜர் மாடசாமி புகார் அளித்தார். அதன்பேரில் ராமகிருஷ்ண ராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும் அவர் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேலாளர் தகவல் தெரிவித்தார்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்