கோவை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் மாதாந்திர கூட்டம்

கோவை மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சிலின் மாதாந்திர கூட்டம் தவித்திரு சாந்தலிங்க அடிகளார் பேரூர் கல்லூரியில்  தவத்திரு மருதாசல அடிகளார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது அதில் பின்வரும் முக்கியமான முடிவுகள் குறித்து ஒருமித்த கருத்து பெறப்பட்டது உறுப்பினர்களின் உறுப்பினர் அட்டை காலாவதியாகிவிட்டது அதை புதுப்பிக்க வேண்டிய படிவங்கள் கொடுக்கப்பட்டு 3 வருடத்திற்கு செல்லத்தக்க புதிய உறுப்பினர் அட்டை கொடுக்கப்படும் நமது கவுன்சிலின் 37 வது ஆண்டு விழாவையொட்டி  வருகின்ற டிசம்பர் மாதம் 21ஆம் நாள் விழா மலர் வெளியிடுவது எனவும் அதற்காக அடிகளார் தலைமையில் முக்கிய துறைகளில் தலைவர்களை அழைப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது ஒவ்வொரு கூட்டத்திற்கும் உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ள வேண்டும் எனவும் அவரவர் பகுதியில் பொதுமக்களின் குறைகளை கேட்டு அறிந்து அதை தலைமைக்கு தெரியப்படுத்தினால் அந்தக் குறையை  துறை சார்ந்த அதிகாரிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு நிவர்த்தி செய்து தரப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது இக்கூட்டத்தில் மாவட்ட செயல் தலைவர் அய்யாசாமி மாவட்ட செயலாளர் துரைசாமி மாவட்டத் துணைத் தலைவர் சமூக ஆர்வலர் லயன். தேவபாலன்  மற்றும் காட்டன் பாலு உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!