கணபதிபாளையத்தில் ஸ்ரீ மீனாட்சி அம்மன் சொக்கநாதர் திருக்கோவில் திருக்கல்யாண விழா

 திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தில் ஸ்ரீ மீனாட்சி அம்மன் சொக்கநாதர் திருக்கோவில் உள்ளது.

இந்த திருக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் ஆடிப்பூரம் திருவிழா நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் திருவிழா கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்தது இந்நிலையில் அன்னை ஸ்ரீ மீனாட்சி அம்மனின் பிறந்த நாள் ஜென்மாஷ்டமி இன்று கொண்டாடப்படுகிறது இதனை ஒட்டி அம்பிகைக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது

அம்மனுக்கு வண்ண மலர்கள் மற்றும் கண்ணாடி வளையல்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது பல்வேறு வாசனை பொருட்கள் மற்றும் நறுமணப் பொருட்கள் போன்றவை கொண்டு யாகம் வளர்த்தது தொடர்ந்து லட்சார்ச்சனை காலை ஆறு மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற்றது இதில் கணபதிபாளையம் மட்டுமல்லாது திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பிகையின் அருள் பெற்று சென்றனர் மேலும் நாளை ஆடிப்பூரம் திருவிழாவும் நாளை மறுநாள் திருக்கல்யாணமும் நடைபெறும் என்று திருக்கோவில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!