காமராஜர் பிறந்த நாள் விழா மற்றும் மாணவர்களுக்கு எவர்சில்வர் உணவுத் தட்டு வழங்கும் விழா...

 காமராஜர் பிறந்த நாள் விழா மற்றும் மாணவர்களுக்கு எவர்சில்வர் உணவுத் தட்டு வழங்கும் விழா



ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி NGO செக்டார் மற்றும் முன்னாள் மாணவர்கள் சார்பில் சிவகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவியர் அனைவருக்கும் எவர்சில்வர் தட்டுகள் வழங்கும் விழா காமராஜர் பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில் 15.07.2023 அன்று நடைபெற்றது.



விழாவிற்கு சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவர் திருமதி பிரதீபா கோபிநாத்  தலைமை ஏற்று தொடங்கி வைத்தார் கொடுமுடி வட்டார கல்வி அலுவலர் 


முருகன்  முன்னிலை வகித்தார் தலைமை ஆசிரியர் திருமதி யசோதா தேவி  வரவேற்புரை நிகழ்த்தினார் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் திரு சந்திரசேகர் அவர்களும் வார்டு கவுன்சிலர் திரு பெருமாள் அவர்களும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் திருமதி இலக்கியா அவர்களும் வாழ்த்துரை வழங்கினர் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் எவர்சில்வர் உணவு தட்டுகளும் இனிப்புகளும் வழங்கப்பட்டன. 


இவ்விழாவில் காங்கிரஸ் கமிட்டி பிரமுகர்களும் பள்ளி நிர்வாக குழுவினரும் ஆசிரியர்களும் மாணவர்களும் திரளாக கலந்து கொண்டனர். காமராஜரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. மாணவர்களுக்கு பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டன.


ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் என்ஜிஓ செக்டார் தலைவர் திரு. திரிலோகச் சந்தர் அவர்களும் இவ்வமைப்பின் மாவட்டச் செயலாளர் திரு. செந்தில்குமார் அவர்களும் மாவட்டப் பொருளாளர் திரு ஆனந்தன் அவர்களும் பள்ளித் தலைமையாசிரியர் திருமதி ஆ.யசோதா தேவி அவர்களும் மாணவர்களுக்கு எவர்சில்வர் தட்டுகள் வழங்கிச் சிறப்புரையாற்றினர்.


விழாவினை பட்டதாரி ஆசிரியர் திரு எஸ். உமாபதி அவர்கள் தொகுத்து வழங்கினார். பட்டதாரி ஆசிரியர் திருமதி பா. கவிப்பிரியா அவர்கள் நன்றி நவில, அனைவருக்கும் தேநீர், இனிப்பு வழங்கி விழா இனிதே நிறைவு செய்யப்பட்டது.


தமிழ் அஞ்சல் செய்தியாளர் மகுடபதி

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!