தூத்துக்குடி தொகுதியில் 28 வேட்பாளர்கள் போட்டி : ஆட்சியர் தகவல்!

 

தூத்துக்குடி தொகுதியில் 28 வேட்பாளர்கள் போட்டி : ஆட்சியர் தகவல்!

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் 28 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்று தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தெரிவித்தார். 

தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதை முன்னிட்டு 20.03.2024 முதல் 27.03.2024 அன்று பிற்பகல் 3.00 மணி வரை 53 வேட்பு மனுக்கள் வேட்பாளர்களிடமிருந்து வரப்பட்டு 28.03.2024 அன்று தேர்தல் பொது பார்வையாளர் திவேஷ் ஷெஹரா, முன்னிலையில் தூத்துக்குடி பாரளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி, அவர்களால் கூர்ந்தாய்வு செய்யப்பட்டது. இதில் 31 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

இன்று 30.03.2024 பிற்பகல் 3.00 மணி வரை வேட்பு மனுக்களை வாபஸ் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது, பிற்பகல் 3.00 மணி வரை 3 வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் பொது பார்வையாளர் திவேஷ் ஷெஹரா, முன்னிலையில் தூத்துக்குடி பாரளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி, தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் 28 வேட்பாளர்களுக்கு சின்னங்களை ஒதுக்கினார்.

இந்த தேர்தலில் 03 பெண்கள் 25 ஆண்கள் உட்பட 28 நபர்கள் போட்டியிடுகின்றனர். அதனைத் தொடர்ந்து, தேர்தல் பொது பார்வையாளர் முன்னிலையில் தூத்துக்குடி பாரளுமன்ற தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் ஸ்ரீஜூ, அஜய் ரூமல் கர்டே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் லோக.பாலாஜி சரவணன், வாக்காளர் பதிவு அலுவலர் / தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் மதுபாலன், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், உதவி தேர்தல் அலுவலர்/வருவாய் கோட்டாட்சியர் பிரபு, வேட்பாளர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி