தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் எம் .பி .கனிமொழிக்கு ஆதரவாக தீவிரப் பிரச்சாரம் !


 தூத்துக்குடியில் அமைச்சர் கீதாஜீவன் எம் .பி .கனிமொழிக்கு ஆதரவாக தீவிரப் பிரச்சாரம்

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழியை கருணாநிதியை ஆதாித்து முள்ளக்காடு, முத்தையாபுரம், பொட்டல்காடு, பொியசாமிநகர், எம்.ஜி.ஆா் நகர், சத்யாநகர், ராஜபாண்டி நகா், ஆகிய பகுதிகளில் வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 


அப்போது அவர் பேசுகையில், திமுக ஆட்சி அமைந்தபின் கலைஞர் வழியில் தளபதியார் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் திராவிட மாடல் ஆட்சியை சிறப்பாக செய்து வருகிறார். 


அதே போல் கடந்த ஆண்டு எதிர்பாராமல் பெய்த கனமழையால் ஏற்பட்ட வௌ்ள பாதிப்பின் போது எல்லா தரப்பினருக்கும் நாம் ஓவ்வொரு வகையிலும் உதவிகள் செய்து மக்கள் நலன் தான் முக்கியம் என்று பணியாற்றியுள்ளோம். என்பது பொதுமக்களுக்கு தெரியும். அதிமுக பிஜேபி கட்சிகளுக்கு வரும் தோ்தலில் சாியான பாடம் புகட்ட வேண்டும் என்று பேசினார். 


பிரச்சாரத்தின் போது, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டலத்தலைவர் வழக்கறிஞர் பாலகுருசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மாநில துணைத்தலைவர் சண்முகம், சிபிஎம் செயற்குழு உறுப்பினர் அர்ஜூனன், மதிமுக மாநகர செயலாளர் முருகபூபதி, மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் முரளிதரன், மாநகர திமுக இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன்ஜேக்கப், பெருமாள் கோவில் அறங்காலர்கள் குழு தலைவர் செந்தில்குமார்


திமுக பகுதி செயலாளர் மேகநாதன், இளைஞர் அணி அமைப்பாளர் அருண்சுந்தர், மாவட்ட பிரதிநிதி சுரேஷ், செந்தில்குமார், மாமன்ற உறுப்பினர்கள் சுயம்பு, பட்சிராஜன், ராஜதுரை, வைதேகி, வட்ட செயலாளர்கள் மூக்கையா, செல்வராஜ், பகுதி இளைஞரணி அமைப்பாளர் சூர்யா, கிளை செயலாளர்கள் பிரசாத், நடேசன் டேனியல், மனோகரன், சந்தனராஜ், மதிமுக மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள் சரவணபெருமாள், பாலசுப்பிரமணியன், மதிமுக நிர்வாகிகள் பொன்ராஜ், மகாராஜன், பொய்யாமொழி மற்றும் திமுகவினர்,  கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி