புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா

 புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் புதிய நிர்வாகிகள் அறிமுக விழா கழகத்தின் தலைவர் மு.ராமதாஸ் தலைமையில் சேர்மன் ஆர்.எல் வெங்கட்டராமன் முன்னிலையில் நடைபெற்றது. 

 புதுச்சேரி மாநில மக்கள் முன்னேற்றக்  கழக நிர்வாகக் குழுவில் காலியாக இருந்த பல பொறுப்புக்களுக்கு பின்வரும் நபர்கள் கட்சித் தலைவரால் நிர்வாகக் குழுவின் ஒப்புதலோடு சமீபத்தில் நியமிக்கப்பட்டனர்.
 அவர்கள் அனைவரும் முறைப்படி இன்று பொறுப்பேற்றுக் கொண்ட விழா ஹோட்டல் சர்குரு வில் நடை பெற்றது.
 அறிமுக விழாவில் மாநில துணைத் தலைவர்களாக  
J நித்தியானந்தம், M ஆனந்த்,,  செயலாளர்களாக 
N ரவிக்குமார்,  டாக்டர் ஜான்
 K பிலிப்ஸ் , டாக்டர் K மோகனசுந்தரம், 
 N சிவக்குமரன்,  இணைச் செயலாளராக  GD இளங்கோவன், துணைச் செயலாளர்களாக  
N வேதராமன்,  
K ராதாகிருஷ்ணன்,  
M சித்தானந்தம், 
 C கஜேந்திர பாஸ்கர்,,   
M.. கலியபெருமாள், 
 J  சுப்பிரமணியன்,  K ரகுபதி உதவிச் செயலாளர்களாக  
R. இதயவேந்தன்,  
R விஜயகுமார், 
D முருகன்,B ரகு,  
M.G. கருணாநிதி,  செயற்குழு உறுப்பினர்களாக
 P சுப்பிரமணியம் டாக்டர்  சுப்பராயலு நாயுடு, தினகரன், புருஷோத்தமன், ஆகியோர் இன்று  பொறுப்பும் ஏற்றுக் கொண்டனர் அவர்கள் இன்று கழக உறுப்பினர்களுக்கும் பொது மக்களுக்கும் 
அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.
 இவர்களோடு புதியதாக நியமிக்கப்பட்ட ஆதிதிராவிடர் நல அணி தலைவராக ரஞ்சித் குமார் துணைத் தலைவராக துளசிங்கம் உள்ளிட்ட பத்து உறுப்பினர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
 அவர்களுக்கு பொறுப்புக்களை வழங்கி சால்வை அணிவித்து கழகத்தின் தலைவர் பேராசிரியர் மு. ராமதாஸ் அவர்கள் அறிமுகம் செய்து வைத்து பேசினார். 
 விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் பொதுச் செயலாளர் பேராசிரியர் 
எ. மு.ராஜன் வரவேற்றுப் பேசினார். சேர்மன் ஆர். எல். வெங்கட்டராமன் நோக்க உரையாற்றினார். உறுப்பினர்கள் கலந்து கொண்ட பயனுள்ள கலந்துரையாடும் நிகழ்ச்சி  நடைபெற்றது.
 இறுதியாக பொருளாளர் முனைவர் பெண்ணியம் செல்வகுமார் நன்றி உரை வழங்கினார்.
 நிகழ்ச்சியில் தற்போதைய நிர்வாகிகள்  மாநிலச் செயலாளர் பரந்தாமன், உதவிச்  செயலாளர் ஆண்டாள். மீனவர அணித்  தலைவர் சந்திரன் மற்றும் அணித்  உறுப்பினர்கள், மகளிர் அணித் தலைவர் விமலா பெரியாண்டி மற்றும் உறுப்பினர்கள் திரளாக் கலந்து கொண்டனர். 

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!