ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், அரியப்பம்பாளையம் பேரூராட்சி பகுதி அதிமுக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம்..


 ஈரோடு மாவட்டம், அதிமுக சத்தியமங்கலம் தெற்கு ஒன்றியம், அரியப்பம்பாளையம்பேரூராட்சிபகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டம், சத்தியமங்கலம் நேரு நகர், அதிமுக பேரூர் கழக அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு,அதிமுக சத்தி தெற்கு ஒன்றிய செயலாளர் என்.என். சிவராஜ் தலைமை தாங்கினார். அரியப்பம் பாளையம் அதிமுக பேரூர் கழக செயலாளர் பி.என்.தேவமுத்து முன்னிலை வகித்தார். 

கூட்டத்தில், அரியப்பம்பாளையம் பேரூராட்சி பகுதி பூத் கமிட்டி பொறுப்பாளர்கள், அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட, மாவட்ட மகளீரணி துணைச் செயலாளர் வெ.பெ. தமிழ்ச் செல்வி, சித்ரா மற்றும் வழக்கறிஞர் சிவசக்தி மாரியப்பன் ஆகியோர் பூத் கமிட்டி நிர்வாகிகள் செயல்பாடுகள், உடனடி பணிகள், கட்சி தலைமையால் வழங்கப்பட்ட படிவங்கள் பூர்த்தி செய்தல் சார்பு அணி நிர்வாகிகளை ஒருங்கிணைத்து செயல்படுதல் ஆகியன குறித்து விளக்கி பேசினர்  

கூட்டத்தில் அதிமுக சத்தி தெற்கு 
ஒன்றிய , முன்னாள் செயலாளர் ரங்கசாமி,  முன்னாள் ஒன்றிய சேர்மன் எம்..பி.துரைசாமி, முன்னாள் பேரூராட்சி சேர்மன் பி.ஆர்.துரைசாமி
கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.சரவணன், மாவட்ட பிரதிநிதி சோழா. தனசேகர், மற்றும் அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், வார்டு செயலாளர் கள் கலந்து கொண்டனர்.







Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!