தாமதமாக பதிவு செய்தாலும் அபராதம் இல்லை...திருப்பூர் தொழில்துறையினருக்கு கோவை மண்டல இ.எஸ்.ஐ. அலுவலகம் அழைப்பு
இ.எஸ்.ஐ புதிய திட்டம் திருப்பூர் தொழிலாளர்களுக்கு வரப்பிரசாதம். தொழில்துறையினர் தொழிலாளர்கள் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என திருப்பூரில் நடைபெற்ற இ எஸ் ஐ புதிய திட்ட அறிமுக கூட்டத்தில் கோவை மண்டல அலுவலர் கார்த்திகேயன் தெரிவித்தார்.
புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள இ.எஸ்.ஐ திட்டம் குறித்த விளக்கம் மற்றும் அறிமுக விழா திருப்பூரில் உள்ள தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் திருப்பூரைச் சேர்ந்த பனியன் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். கோவை இஎஸ்ஐ மண்டல அலுவலர் கார்த்திகேயன்,
தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் வைகிங் ஈஸ்வரன்ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள ஸ்பிரீ 2025 திட்டம் குறித்து விளக்கம் அளித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இ எஸ் ஐ கோவை மண்டல அலுவலர் கார்த்திகேயன் பேசுகையில் தொழிலாளர் நல அமைச்சகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள ஸ்பிரீ 2025 என்ற புதிய திட்டத்தை திருப்பூர் தொழில் துறையினருக்கு அறிமுகம் செய்ய சைமா அலுவலகத்தில் சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் தகுதியான தொழிலதிபர்கள் தொழிலாளர்கள் தங்களை இணைத்துக் கொள்ளும் வகையில் அமைக்கப்படுள்ளது. தாமதமான பதிவுகளுக்கு எந்த விதமான அபராதம் மற்றும் கூடுதல் கட்டணங்கள் இல்லை என்பது இதன் சிறப்பு அம்சமாக உள்ளது இதனை பயன்படுத்தி தொழில் துறையினர் மற்றும் தொழிலாளர்கள் இணைந்து கொள்ளலாம் எனவும் இணையதளத்தின் மூலம் இந்த திட்டத்தை எளிதாக அணுகி சுய பதிவு செய்து கொள்ளலாம். கோவையில் உள்ள அனைத்து கிளை அலுவலகங்களிலும் உதவி மையங்கள் அமைத்துள்ளோம். என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பேசிய தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் வைகிங் ஈஸ்வரன் கூறுகையில் அருமையான திட்டமாக இது அமைந்துள்ளது. புதிய மற்றும் பழைய நிறுவனங்கள் இதில் இணைவதன் மூலம் எந்த வித மறைமுக கட்டணங்கள் மற்றும் அபராதம் இல்லாமல் சேர்ந்து கொள்ள முடியும். ஏராளமான தொழிலாளர்கள் திருப்பூரில் இருக்கும் நிலையில் இந்த தொழிலாளர்களுக்கு உடல் நலம் காக்க இந்த திட்டத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பேசிய தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் வைகிங் ஈஸ்வரன் கூறுகையில் அருமையான திட்டமாக இது அமைந்துள்ளது. புதிய மற்றும் பழைய நிறுவனங்கள் இதில் இணைவதன் மூலம் எந்த வித மறைமுக கட்டணங்கள் மற்றும் அபராதம் இல்லாமல் சேர்ந்து கொள்ள முடியும். ஏராளமான தொழிலாளர்கள் திருப்பூரில் இருக்கும் நிலையில் இந்த தொழிலாளர்களுக்கு உடல் நலம் காக்க இந்த திட்டத்தை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என தெரிவித்தார்.