தூத்துக்குடியில் மோடி பிறந்தநாளை முன்னிட்டு ஆயுள் ஹோமம்.!

 

தூத்துக்குடி பிரதமர் மோடியின் பிறந்த தினத்தை முன்னிட்டு உலக நன்மைக்காகவும்  நீண்ட ஆயுளுடன் வாழ்வதற்காகவும் ஆயுள் ஹோமம் நடைபெற்றது. அவரது பிறந்த தினம் இரண்டு வாரமாக சேவை வாரமாக கொண்டாடப்பட்டு வருகிறது.  தூய்மை பணியை மேற்கொள்ளுதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல், உள்ளிட்ட பல்வேறு தேவைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மோடி பிறந்த நட்சத்திர தின என்பதால் தூத்துக்குடி மாவட்ட ஆன்மிக பிரிவு சார்பில் மோடியின் நன்மைக்காகவும் உலக நன்மைக்காகவும் நடத்தப்பட்டது. 

ஆன்மீக பிரிவு மாவட்ட தலைவர் ஓம் பிரபு தலைமையில் நடைபெற்றது.  விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கிய ஹோம நிகழ்ச்சியில் நவக்கிரக ஹோமம் லட்சுமி ஹோமம் நடத்தப்பட்டு, ஆயுசு ஹோமம், பூர்ணாகுதி நடைபெற்றன. உலக நன்மைக்காக பல சிறப்பு பிரார்த்தனைகள் செய்யப்பட்டன. ஜி எஸ் டி வரி குறைப்பு செய்தது உள்ளிட்ட நாட்டு மக்களின் நலனுக்காக ஆட்சி நடத்தி வரும் பிரதமர் நீண்ட காலம் ஆயுளுடன் வாழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர். ஆன்மீக பிரிவு மாநில துணைத்தலைவர் நெல்லையம்மாள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.  தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பாஜக மண்டல தலைவர் ராஜேஷ் கனி, ஆன்மீக ஐயப்பன்  சொக்கலிங்கம், ஓபிசி மாநிலத் துணைத் தலைவர் சுவைதர், வழக்கறிஞர் சண்முகசுந்தரம்,  எவரெஸ்ட் பேட்டரி ஜெயச்சந்திரன், உஷாதேவி, ஜெயரூபி, லதா சௌந்தரபாண்டியன், வெள்ளதாய், சக்திவேல், மணிகண்டன் சிவராமன் பாலாஜி, சுகுமார் பாலச்சந்தர், செல்வி லதா, அனுசியா, கோபி ராஜேஷ் கனி, சண்முகசுந்தரம் சுகுமார் ,லட்சுமி வேல்கனி     பாலமுருகன், செந்தில் ஆறுமுகம், சேகர், சேர்மகுருமூர்த்தி , மணிகண்டன் ஹனி உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!