திருச்செந்தூர் சூரசம்ஹார விழா: சிறப்பு அனுமதி வாகன பாஸ் கள்ளச் சந்தையில் விற்பனையா.!? தூத்துக்குடி மாவட்ட காவல்துறை மறுப்பு.!

 

சூரசம்கார விழா அன்று வழங்கப்படும் சிறப்பு பாஸ் அல்லாமல் இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே அங்குள்ள தனியார் விடுதிகளில் தங்கும் பயனர்களுக்கு தங்கள் உடைமைகளை எடுத்துச் செல்வதற்கும் அத்தியாயவசிய தேவைகளுக்கு செல்லும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி பாஸ் வழங்கப்பட்டது என மாவட்ட காவல்துறை விளக்கம்.

இந்த ஆண்டு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் கந்த சஷ்டி திருவிழாவை முன்னிட்டு சூரசம்கார நிகழ்வு நாளன்று மட்டும் பயன்படுத்தும் சிறப்பு அனுமதி வாகன பாஸ் யாருக்கும் வழங்கப்படவில்லை. அதன்படி சிறப்பு அனுமதி பாஸ் உள்ள வாகனங்கள் மட்டும் நிறுத்துவதற்கு நிர்ணயிக்கப்பட்ட திருச்செந்தூர் ஐடியல் வாகன நிறுத்தம் மற்றும் வனப்பார்வதி ஆகிய வாகன நிறுத்துமிடங்களில் சிறப்பு வாகன பாஸ் ரத்து உத்தரவை தொடர்ந்து எந்த ஒரு வாகனமும் நிறுத்தப்படவில்லை.

மேலும் சூரசம்கார விழாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே திருச்செந்தூர் TB சாலையில் உள்ள 70ற்கும் மேற்பட்ட தனியார் விடுதிகளில் தங்குவதற்கு, முன்னதாகவே புக்கிங் செய்த பயனர்களுக்கு மட்டுமே விடுதியின் வாகன நிறுத்தங்களில் வாகனங்களை நிறுத்தி அவர்களின் உடைமைகளை எடுத்துச் செல்வதற்காக மட்டும் குறைந்த அளவே லாட்ஜ் பாஸ் வழங்கப்பட்டது. அதன்படி விடுதியில் முன்னதாகவே புக்கிங் செய்து ஒருநாள் முன்பாக வரும் பக்தர்களின் வசதிக்காகவும், தூரத்தில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் இருந்து அவர்களது உடைமைகளை லாடஜ் வரை எடுத்துச் செல்லும் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டே விடுதியில் உள்ள வாகன நிறுத்துமிடங்கள் வரை செல்வதற்கு மட்டுமே இந்த சாதாரண லாட்ஜ் பாஸ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.மேலும் விடுதியில் தங்கும் நேரத்திற்கு (Check-in Time) மட்டும் அனுமதி சீட்டு அனுமதிக்கப்பட்டது. மேலும் அனுமதி இன்றி லாட்ஜ் முன்போ வேறு எந்த ஒரு இடத்திலோ தனியார் வாகனங்கள் நின்றால் காவல்துறையினர் உடனடியாக அதனை அப்புறப்படுத்தி தனியார் வாகனம் நிறுத்துமிடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்வார்கள். எனவே அதன் காரணமாக விடுதியில் தங்கும் பயனர்களுக்கு மட்டும் விடுதி பாஸ் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் கோயில் பராமரிப்பு பணி, மின் ஊழியர்கள் பணி, பால் மருந்து போன்ற அத்தியாவசிய பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு சிறப்பு பாஸ் அல்லாமல் அனுமதி பாஸ் மட்டுமே வழங்கப்பட்டது. இது ஒவ்வொரு ஆண்டும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

எனவே சூரசம்கார விழா பாதுகாப்பில் திருச்செந்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையில் சிறப்பு அனுமதி வாகன பாஸ் கள்ளச் சந்தையில் விற்பனை என செய்தி வெளியானதற்கு மாவட்ட காவல்துறை மறுப்பு தெரிவிப்பதுடன் தனியார் லாட்ஜ் பயனர்கள் மற்றும் அத்தியாவசி தேவைகளுக்கான வாகனங்களுக்கு மட்டும் சாதாரண அனுமதி பாஸ் வழங்கப்பட்டது என்று தூத்துக்குடி மாவட்ட காவல்துறை இதன் மூலம் தெளிவுபடுத்தி விளக்கம் அளிக்கிறது.

எனவே இது போன்ற செய்தியின் உண்மைத் தன்மை தெரியாமல் காவல்துறைக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கில் தவறான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் எனவும் மாவட்ட காவல்துறை கேட்டுக்கொள்கிறது.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!