தூத்துக்குடி மாநில அளவிலான மூத்தோர்களுக்கான தடகளப் போட்டிக்கு செல்லும் வீரா் வீராங்கனைகளை கொடியசைத்து வழி அனுப்பி வைத்தனா்.

 

தூத்துக்குடி மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் சார்பாக காரைக்குடியில் நடைபெறும் மாநில அளவிலான மூத்தோர்களுக்கான தடகளப் போட்டிக்கு தூத்துக்குடி மாவட்ட மூத்தோர் தடகள வீரர் மற்றும் வீராங்கனைகளை வெற்றி வாய்ப்பை பெற்று வருமாறு வாழ்த்துக்களை கூறி மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் நிறுவனத் தலைவர் அசோகன் கொடி அசைத்து வீரர்களை வழி அனுப்பி வைத்தார். மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் செயலாளர் குப்புசாமி பாராட்டினார். 

மாநில அளவிலான தடகளப் போட்டிற்கு 110க்கும் மேல் அதிகமான வீரர் வீராங்கனைகளை கொண்ட மாவட்டம் நமது தூத்துக்குடி மாவட்டம் என்ற சிறப்பை பெற்றதற்கு, மாவட்ட மூத்தோர் தடகள சங்கத்தின் தலைவர் பாயஸ் பாய், செயலாளர் குப்புசாமி, பொருளாளர் மெர்சி பத்மாவதி, உப தலைவர்கள்  முனியசாமி முரளி, ராகவனந்தம், ஸ்டீபன் தியாகராஜன், ரங்கநாதன், இணைச் செயலாளர் ஏஞ்சலின் கோயில் ராஜ், ஆனந்தராஜ், மாரிச்சாமி, லாரன்ஸ், ராபர்ட் சன் கென்னடி மற்றும் உறுப்பினர்கள்   வீரர் வீராங்கனைகளுக்கு வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி