மூலப்பொருட்கள் விலை உயர்வு எதிரொலி.. உள்நாட்டு பின்னலாடைக்கு 7 சதவிகித விலை உயர்வு.
மூலப்பொருட்கள் விலை உயர்வு எதிரொலி
உள்நாட்டு பின்னலாடைக்கு 7 சதவிகித விலை உயர்வு.
திருப்பூரில் பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பிரதானமாக இருந்து வருகிறது. திருப்பூரில் உற்பத்தி செய்யப்படும் ஆயத்த பின்னலாடைகள் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்காக அனுப்படுகிறது. ஏற்றுமதிக்கு இணையாக உள்நாட்டு வர்த்தகமும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மூலப்பொருட்கள் தட்டுப்பாடு, பஞ்சு விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், பின்னலாடை ரகங்கள் 7 சதவீதம் விலை உயர்த்தப்படுவதாக தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இது குறித்து தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சண்முகசுந்தரம் கூறுகையில்,
சர்வதேச அளவில் ஈரான் - இஸ்ரேல் போரால் ஏற்பட்டுள்ள கடுமையான நெருக்கடியால் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வால் பின்னலாடை உற்பத்திக்கு பிரதான மூலப்பொருளான நூலின் விலை உயர்வோடு, தற்போது ஆடைகளுக்குப் பயன்படுத்தப்படும் எலாஸ்டிக் , பாலிபேக் மற்றும் பேக்கிங் செய்யப் பயன்படும் பாலிபேக் உள்ளிட்ட இதர பொருட்களின் விலையும் வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது. மேலும் கேஸ் தட்டுப்பாடு காரணமாக சாய ஆலைகளில் துணிகளுக்கான சாயமேற்றும் கட்டணம் . பிரிண்டிங்க் உள்ளிட்டவைகளின் சேவை கட்டணமும் கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் உற்பத்தி செலவு உயர்ந்துள்ள நிலையில் பின்னலாடை உற்பத்தியாளர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் தற்போதைய தொழில் நெருக்கடிகள் , உற்பத்தி சூழல், மூலப்பொருட்களின் விலை உயர்வுக்கு ஏற்ப பின்னலாடைகளின் விற்பனை விலையை உயர்த்த முடிவு செய்து இன்று முதல் பின்னலா