லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு - தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையர் சரவணக்குமார் சஸ்பெண்ட். .!
தூத்துக்குடி மாநகராட்சியில் ஒரு வருட காலமாக துணை ஆணையராக பணியாற்றி வருபவர் சரவணகுமார். இதற்கு முன்பு சரவணகுமார் நாகர்கோவில். தஞ்சாவூர் அதன் பிறகு ஈரோடு ஆகிய மாநகராட்சிகளில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். பணியாற்றி வந்த காலத்தில் புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை மேற்கொண்டு வந்தது அதன் அடிப்படையில் இன்று தூத்துக்குடி மாநகராட்சி துணை ஆணையராக பணியாற்றி வரும் சரவணக்குமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் அதற்கான உத்தரவை இன்று துணையானையர் சரவணக்குமாரிடம் வழங்கப்பட்டது
