Posts

அதிரி புதிரியாக 50 உலக சாதனைகள்... சொல்லி அடித்த ஃப்ரண்ட்லைன் பள்ளி மாணவர்களுக்கு குவியும் பாராட்டு

Image
  திருப்பூர்   ஃப்ரண்ட்லைன்   மில்லினியம்   பள்ளியில்  , 50  உலக   சாதனைகளை செய்து அசத்திய மாணவர்களுக்கு பாராட்டுகள் குவிகிறது. திருப்பூர்   ஃப்ரண்ட்லைன்   மில்லினியம்   பள்ளியின்  25  ஆம்   ஆண்டு   விழாவினை   முன்னிட்டு , 50  உலக   சாதனைகளை   செய்து   அந்த   பள்ளி   மாணவ -  மாணவிகள்   அசத்தியுள்ளனர் .    திருப்பூர்   ஃபிரண்ட்லைன்   கல்விக்குழுமத்தன்   சார்பில்  25  ஆம்   ஆண்டு   விழா   கொண்டாடப்பட்டது .  இதில்  50  உலக   சாதனைகள்   மேற்கொள்ள   முடிவு   செய்யப்பட்டு   அதற்கான   நிகழ்ச்சி   நடைபெற்றது .    எலைட்   வேர்ல்ட்   ரெக்கார்ட்ஸ் ,  ஏசியன்   ரெக்கார்ட்ஸ்   அகாடமி ,  இந்தியா   ரெக்கார்ட்ஸ்   அகாடமி   மற்றும்   தமிழன்   புக்   ஆஃப்   ரெக்கார்ட்ஸ்   ஆகிய   அமைப்புகளின்     பிரதி...

கணபதிபாளையத்தில் ஸ்ரீ மீனாட்சி அம்மன் சொக்கநாதர் திருக்கோவில் திருக்கல்யாண விழா

Image
 திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கணபதிபாளையத்தில் ஸ்ரீ மீனாட்சி அம்மன் சொக்கநாதர் திருக்கோவில் உள்ளது. இந்த திருக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் ஆடிப்பூரம் திருவிழா நடைபெறுவது வழக்கம் அந்த வகையில் திருவிழா கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்று வந்தது இந்நிலையில் அன்னை ஸ்ரீ மீனாட்சி அம்மனின் பிறந்த நாள் ஜென்மாஷ்டமி இன்று கொண்டாடப்படுகிறது இதனை ஒட்டி அம்பிகைக்கு லட்சார்ச்சனை நடைபெற்றது அம்மனுக்கு வண்ண மலர்கள் மற்றும் கண்ணாடி வளையல்கள் கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது பல்வேறு வாசனை பொருட்கள் மற்றும் நறுமணப் பொருட்கள் போன்றவை கொண்டு யாகம் வளர்த்தது தொடர்ந்து லட்சார்ச்சனை காலை ஆறு மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற்றது இதில் கணபதிபாளையம் மட்டுமல்லாது திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பிகையின் அருள் பெற்று சென்றனர் மேலும் நாளை ஆடிப்பூரம் திருவிழாவும் நாளை மறுநாள் திருக்கல்யாணமும் நடைபெறும் என்று திருக்கோவில் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழக அரசின் வருமுன் காப்போம் மாபெரும் இலவச பன்நோக்கு மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார் அந்தியூர் எம்எல்ஏ.

Image
 ஈரோடு மாவட்டம் அந்தியூர் தொகுதி அம்மாபேட்டை வடக்கு  ஒன்றியம்  வெள்ளித்திருப்பூர்  ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஈரோடு மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் நடைபெற்ற,கலைஞரின் வரும்முன் காப்போம்  மாபெரும் இலவச  பன்னோக்கு   மருத்துவ முகாமை துவக்கி வைத்தார். அந்தியூர் சட்டமன்ற. உறுப்பினர் வெங்கடாசலம் இம்முகாமில், கலந்து கொண்ட பொதுமக்களுக்கு இரத்த அழுத்தம்,இ.சி.ஜி., கண் சம்பந்தப்பட்ட சிகிச்சைகள், எலும்பு முறிவு மருத்துவம், இரத்தப் பரிசோதனை, பொது மருத்துவம் போன்ற பல்வேறு மருத்துவ துறைகளை சேர்ந்த மருத்துவர்களிடம்  பொதுமக்கள் பரிசோதனை செய்து கொண்டு சிகிச்சை மேற்கொண்டனர். மேலும் முகாமில் கலந்து கொண்ட தாய்மார்களுக்கு இலவச சத்துப் பெட்டகங்கள்,  மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ்  தேர்வு செய்யப்பட்ட பயனாளர்களுக்கு மருந்துப் பெட்டகங்களை சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம்  வழங்கினார்.  உடன் வட்டார மருத்துவ அலுவலர்  அருள்மணி, ஒன்றிய கழக செயலாளர்   சரவணன்,மருத்துவர்கள் மாதேஷ் குமார்,அன்புமணி...

அந்தியூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுடன் எம் எல் ஏ நேரில் சென்று ஆய்வு....

Image
 ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டம்  சின்னத்தம்பி பாளையம் ஊராட்சி பிச்சைப்பாளிமேடு பகுதியில் உள்ள பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனு வந்ததன் அடிப்படையில் அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம்  சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட போது பொதுமக்களுக்கு  சுத்திகரிக்கப்பட்ட ஆற்று குடிநீர் சரிவர வருவதில்லை என்றும் ஊராட்சி மன்ற நிர்வாகத்தால் தங்கள் வசிக்கும் பகுதிகளில் போதிய அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர். இது சம்பந்தமாக வட்டார வளர்ச்சி அலுவலரிடம்  பொது மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட ஆற்றுக் குடிநீர் மற்றும் போதிய அடிப்படை வசதிகளை விரைவில் செய்து தருமாறு வேண்டுகோள் விடுத்தார். தமிழ் அஞ்சல் செய்தியாளர் என். நரசிம்மமூர்த்தி.

நம்பியூரில் காமராஜர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

Image
 நம்பியூரில் காமராஜரின் 121 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.மேலும்  வரதராஜன் நாடார் தலைமையில், எஸ்.கே.தனபால் நாடார்,சி.சாமிநாத நாடார் ஆகியோர முன்னிலையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட நடிகர் பயில்வான் ரங்கநாதன், காமராஜர் மக்கள் பாதுகாப்பு தலைவர் எஸ். பி.பூமிநாதன் நாடார், அகில இந்திய நாடார் வாழ்வுரிமை சங்க நிறுவனத் தலைவர் சதா நாடார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.  இதில் நாடார் சங்க நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவின் முடிவில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை எஸ்.கே. தனபால் நாடார் செய்திருந்தார்.

ராமேஸ்வரத்தில் கிராம கோவில் பூசாரிகளின் 53 வது பயிற்சி முகாம்

Image
இராமேஸ்வரம் கோசுவாமிமடத்தில் கிராமக் கோவில் பூஜாரிகள் பேரவையின் 53வது பூஜாரிகள் பயிற்சி முகாமின் நிறைவு விழாவானது16-07-2023 தேதி ஞாயிறு காலை11மணிக்கு பேரவை நிறுவனர் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் முன்னால் அகில உலக செயல் தலைவர் ஸ்ரீ S.வேதாந்தம்  தினமலர்பங்குதாரரும் மற்றும் விஸ்வ ஹிந்து பரிஷத் மாநிலதலைவர் R.R கோபால், ஜோகோ அதிபர் ஸ்ரீதர்வேம்பு  முன்னாள் ஐ.ஜி பொன் மாணிக்கவேல், மாநில பொதுச் செயலாளர் சோமசுந்தரம்  மாநில இணைபொதுசெயலாளர் வழக்கறிஞர் விஜயகுமார் மற்றும் ராமசுப்பு பூஜாரிகளுக்கு பயிற்சி அளித்த ஆச்சாரியாபக்ஷிசிவம் மேலும் பயிற்சி பெற்ற 95பூசாரிகள் மற்றும் மகளிர் உடன் சேர்ந்து 200க்கும் மேற்பட்டோர் நிறைவு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இந்நிகழ்ச்சியில் தலைவர் பேசியதாவது உண்மையான சமூக நீதி நமது அமைப்பில் தான் கடைப்பிடிக்கப்பட்ட வருவதாக பயிற்சி பெற்ற அனைவரும் சமமாகதான்பயிற்சி அளிக்கப்பட்டதுமேலும் தற்பொழுது மதமாற்றம் அதிகரித்து வருவதை பூசாரிகள் அதிகம் கவனம் கொண்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திஅவற்றை தடுத்து தாய் மதம் திரும்ப வேண்டும் என்றும் ஓ...

காமராஜர் பிறந்த நாள் விழா மற்றும் மாணவர்களுக்கு எவர்சில்வர் உணவுத் தட்டு வழங்கும் விழா...

Image
 காமராஜர் பிறந்த நாள் விழா மற்றும் மாணவர்களுக்கு எவர்சில்வர் உணவுத் தட்டு வழங்கும் விழா ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி NGO செக்டார் மற்றும் முன்னாள் மாணவர்கள் சார்பில் சிவகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவியர் அனைவருக்கும் எவர்சில்வர் தட்டுகள் வழங்கும் விழா காமராஜர் பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில் 15.07.2023 அன்று நடைபெற்றது. விழாவிற்கு சிவகிரி பேரூராட்சி மன்ற தலைவர் திருமதி பிரதீபா கோபிநாத்  தலைமை ஏற்று தொடங்கி வைத்தார் கொடுமுடி வட்டார கல்வி அலுவலர்  முருகன்  முன்னிலை வகித்தார் தலைமை ஆசிரியர் திருமதி யசோதா தேவி  வரவேற்புரை நிகழ்த்தினார் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் தலைவர் திரு சந்திரசேகர் அவர்களும் வார்டு கவுன்சிலர் திரு பெருமாள் அவர்களும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் திருமதி இலக்கியா அவர்களும் வாழ்த்துரை வழங்கினர் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் எவர்சில்வர் உணவு தட்டுகளும் இனிப்புகளும் வழங்கப்பட்டன.  இவ்விழாவில் காங்கிரஸ் கமிட்டி பிரமுகர்களும் பள்ளி நிர்வாக குழுவினரும் ஆசிரியர்களும் மாணவர்களும் திரளாக கலந்து கொண்டனர்....