Posts

காங்கிரஸ் பிரதமர் வேட்பாளர் யார்? ராகுல் காந்தி பெயரை தவிர்த்த கே.எஸ்.அழகிரி

Image
காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் குறித்து கேள்விக்கு ராகுல்காந்தியின் பெயரை சொல்லாமல், கட்சியின் நாடாளுமன்ற குழு முடிவெடுக்கும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறினார். காங்கிரசில் பிரதமர் வேட்பாளரே அறிவிப்பது கிடையாது. காங்கிரஸ் ஒரு ஜனநாயக கட்சி என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் கூடி பிரதமரை தேர்ந்தெடுப்பார்கள் என்றும் கூறினார். முன்பு கூட சோனியா காந்தி தான் பிரதமர் என்று ஊரெல்லாம் சொன்னார்கள். ஆனால் மன்மோகன்சிங் தான் பிரதமரானார். சென்ற தேர்தலில் கூட ஸ்டாலின் அவர்கள் ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்று கூறினார்.  ஆனால் காங்கிரஸ் aதை தீர்மானமாக நிறைவேற்றவில்லை. ஒரு ஜனநாயக கட்சியாக கூட்டத்தில் தான் அதை தேர்ந்தெடுப்போம் என்றார். இந்தியா கூட்டணியின் பணிகள் 5 மாநில தேர்தலுக்காக தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். மேலும் அவர் பேசுகையில், மத்திய அரசின் தவறான நடவடிக்கையால் திருப்பூர் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் வங்கதேசத்தில் இருந்து 4000 கோடி துணி வந்தடைந்திருக்கிறது இது வணிகர்களை கடுமையாக பாதித்த...

தெருநாயால் நெல்லையில் நிருபர் பலி! நாய்கள் காப்பகம் அமைக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் தமிழக அரசுக்கு கோரிக்கை

Image
  *தெருநாயால் நெல்லையில் நிருபர் பலி! நாய்கள் காப்பகம் அமைக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் தமிழக அரசுக்கு கோரிக்கை !*               நாட்டில் அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகளை உடனுக்குடன் செய்திகளாக சேகரித்து ஊடகங்கள் வாயிலாக மக்களுக்கும் அரசுக்கும் தெரியப்படுத்தும் உன்னத பணியை மேற்கொண்டுள்ள ஊடகவியலாளர்கள் தொடர்ந்து பல்வேறு இடங்களில் விபத்துகளில் சிக்கி பலியாகும் செய்தி நம் நெஞ்சை உலுக்குகிறது. மரணங்கள் வாயிலாக பாடங்களைப் படிக்க வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம். குறிப்பாக சென்னையில் புதிய தலைமுறை செய்தியாளர் முத்துகிருஷ்ணன் மழைநீர் வடிகாலில் விழுந்து மறைந்ததை கடந்த ஆண்டு பார்த்தோம். அதன் பிறகு விழித்துக் கொண்டு சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள்  தீவிர படுத்தப்பட்டதையும், பாதுகாப்பாக செய்யப்பட்டதையும் நாம் அறிவோம். தற்பொழுது நெல்லையில் பாலிமர் செய்தியாளர் முத்துக்குமாரசாமி சாலையின் குறுக்கே திடீரென்று  வந்த நாய் மீது மோதி தலையில் அடிபட்டு இறந்துவிட்ட செய்தி மிகவும் சொல்லொண்ணாத துயரத்தை தருகிறது. இம் மரணச் செய்தி நமக்கு  விழிப்புண...

ஊருக்குள் புகுந்து சேதம் விளைவிக்கும் காட்டு யானைகள் அகழி மற்றும் மின்வேலி அமைத்து தர பொதுமக்கள் வேண்டுகோள்

Image
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா கொளப்பள்ளி அருகே உள்ள முருக்கம்பாடி கிராமத்தில் வசித்து வரும் விசுவநாதன் (மாற்றுத்திறனாளி) என்பவர் வீட்டை காட்டு யானை இரவு 10 மணிக்கு அப்பகுதிக்கு வந்து இரவு 1 மணி வரை சுற்றித்திரிந்த காட்டு யானை வீடு மற்றும் அப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களை சேதப்படுத்தி காபி குருமிளகு போன்ற பயிர்கள் நாசம் செய்தது இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் தினந்தோறும் அச்சத்தில் உறைந்துள்ளனர் அப்பகுதியில் தொடர்ந்து யானைகள்  முகாமிட்டு வருவதால் பொதுமக்கள் பீதியில் உள்ளனர் மேலும் இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் வனத்துறையும் அரசும் எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை மேலும் இப்பகுதியில் அகழி மற்றும் மின் வேலி அமைத்து தர தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இப்பகுதி வாழ் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்துள்ளனர்

கனமழைபெய்ததில் குன்னூர் - ஊட்டி சாலையில்மண் சரிவு.

Image
குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலை மற்றும் குன்னூர் - ஊட்டி சாலையில் மண்சரிவு ஏற்பட்டதுகடந்த2நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக 10 க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து நிறுத்தம் செய்யப்பட்டது. மேட்டுப்பா ளையம் குன்னூர் சாலையில் ஏற்பட்ட மண் சரிவால், மரம் விழுந்ததில் அரசு விரைவு பேருந்து சேதம் ஏற்பட்டது.

கனமழைகாரணமாகஊட்டிமலைரயில் ரத்துரயில்வேநிர்வாகம்அறிவிப்பு..

Image
 கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஊட்டிஇடையேயுனெஸ்கோஅந்தஸ்து பெற்ற மலை ரயில் இயக்கப்பட்டு வரு கிறது.கடந்த 2 நாட்களாக  பெய்த கன மழைகாரணமாகரயில்தண்டவாளங் களில் மண்சரிவு ஏற்பட்டும், மரங்கள், பாறைகள்சரிந்துபலஇடங்களில் பாதி ப்புஏற்பட்டுள்ளநிலையில்தண்டவாள ங்கள் சீரமைக்கும்பணிகளுக்காக  மேட்டுப்பாளையம்=உதகைமழை ரயி ல்  25ம் தேதி வரை ரத்து செய்யப்படு வதாகரயில்நிர்வாகம் சற்றுமுன் அறி விப்பு விடுத்துள்ளது. மண் சரிவை அப்புறப்படுத்தும்பணி யில்ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டுவருகின்றனர்.

சத்தியமங்கலத்தில்உதவிதேர்தல்அலுவலர்புதியவாக்காளர்சேர்ப்புகுறித்துநேரில்ஆய்வு.

Image
 தமிழகதேர்தல்ஆணையஅறிவிப்புக் கிணங்க, கடந்த 4ம் தேதி மற்றும் 5ம் தேதிநடைபெற்றவாக்காளர்சேர்த்தல் மற்றும் நீக்கல் சிறப்பு திருத்த முகா மில்,புதிதாக சேர்க்கப்பட்ட இளம் வாக் காளர் பதிவு குறித்து, சத்தியமங்கலம் நகராட்சிஆணையாளரும்,உதவிதேர்தல் நடத்தும் அலுவலருமானசெல்வம் சத்திநகராட்சிபகுதி,குடியிருப்பு பகுதி களில் புதிதாக இணைக்கப்பட்டபுதிய வாக்காளர்களைநேரில்சந்தித்தும்வாக்காளர்நீக்கம்குறித்தும் களஆய்வு மேற்க்கொண்டார். உடன் நகராட்சி வருவாய்துறையினர் மற்றும் வாக்கு சாவடி நிலைய அலுவலர்கள்பங்கேற் றனர்.

சூலூர் காவல் துறையினர் அதிரடி ஐந்து லட்சம் மதிப்புள்ள பான் மசாலா குட்கா பொருட்களை கைப்பற்றினர் இருவர் கைது

Image
சூலூரில் காவல்துறையினர்  சூலூர் பிரிவு அருகே  செங்கோடகவுண்டன்புதூர் பிரிவில் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர் அப்போது சந்தேகத்திற்கு இடமாக அவ்வழியே வந்த  மினி டெம்போ வேன் (TN 47M 1744) ஒன்றை நிறுத்தி பரிசோதனை செய்ததில் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலாக்கள் மூட்டை மூட்டையாக இருந்தது தெரிய வந்தது மொத்தம் 5480 கிலோ அளவிற்க்கு இருந்தது இதன் மதிப்பு சுமார் ஐந்து லட்சத்திற்கும் மேல் இருக்கும் சூலூர் காவல்துறையினர் உடனடியாக குன்னத்துரை சேர்ந்த  ஓட்டுனர்  முத்துகுமார் (45) மற்றும் சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தைச் சேர்ந்த ராஜன்(47) ஆகியோரை கைது செய்து மினி டெம்போ மற்றும் பான் மசாலா குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர் சுமார் ஐந்து லட்சம் மதிப்புள்ள பான் மசாலா குட்கா பொருட்களை சூலூர் காவல்துறையினர் அதிரடியாக பறிமுதல் செய்ததால்  சூலூர் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது