பழனி தாலுகா சின்ன கலையமுத்தூரில் உள்ள குளத்தை காவல்துறையினருடன் பொதுமக்களும் இணைந்து  தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்  


பழனி தாலுகா சின்ன கலையமுத்தூரில் உள்ள குளத்தை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் உத்தரவின்படி பழனி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் விவேகானந்தன் அவர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், பெண் காவலர்கள் மற்றும் ஆண் காவலர்கள் குளத்தை தூர்வாரும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஈடுபட்டனர். காவல்துறையினருடன் இணைந்து சுற்றுவட்டார பொதுமக்களும் குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். குளத்தை தூர்வாருவதால் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் தேவைகளும் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்பதால் காவல்துறை மக்களுடன் இணைந்து சமூக பணிகளை செய்து வருகிறனர். மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்த காவல்துறையின் இச்செயலை சுற்றுவட்டார பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.


 


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!