பழனி தாலுகா சின்ன கலையமுத்தூரில் உள்ள குளத்தை காவல்துறையினருடன் பொதுமக்களும் இணைந்து  தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர்  


பழனி தாலுகா சின்ன கலையமுத்தூரில் உள்ள குளத்தை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் உத்தரவின்படி பழனி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் விவேகானந்தன் அவர்கள் தலைமையில் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், பெண் காவலர்கள் மற்றும் ஆண் காவலர்கள் குளத்தை தூர்வாரும் பணியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஈடுபட்டனர். காவல்துறையினருடன் இணைந்து சுற்றுவட்டார பொதுமக்களும் குளத்தை தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். குளத்தை தூர்வாருவதால் சுற்றுவட்டாரத்தில் உள்ள கிராமங்களுக்கு குடிநீர் தேவைகளும் நிலத்தடி நீர் மட்டம் உயரும் என்பதால் காவல்துறை மக்களுடன் இணைந்து சமூக பணிகளை செய்து வருகிறனர். மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்த காவல்துறையின் இச்செயலை சுற்றுவட்டார பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.


 


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்