இராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலர் ச.ஜெயச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!!

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலர்  ச.ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.


இராணிப்பேட்டைகலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர்  ச.ஜெயச்சந்திரன்  தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிலப்பட்டா புதிய குடும்ப அட்டை, பட்டாமாறுதல் வேலைவாய்ப்பு கடனுதவி நிதியுதவி இலவச வீட்டுமனைப்பட்டா முதியோர்  உதவித் தொகை காவல்துறை பாதுகாப்பு மற்றும் மின் இணைப்பு என 421 மனுக்களை பொதுமக்கள் வழங்கினார்கள். இம்மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர்   சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வழங்கி மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.


இக்குறை தீர்வு நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாற்றுத்திறனாளிகள் நல வாரிய திட்டத்தின் கீழ் இயற்கை மரணம் ஈமசடங்கு திட்டத்தின் கீழ் ரூ.17,000 வீதம் 08 நபருக்கு ரூ.1,36,000-த்தை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலர்  ச.ஜெயச்சந்திரன் வழங்கினார்கள்.  இக்கூட்டத்தில் அனைத்து அரசு துறை அலுவலா;கள் கலந்துக் கொண்டனர்.



     


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்