இராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலர் ச.ஜெயச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்!!

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலர்  ச.ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.


இராணிப்பேட்டைகலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர்  ச.ஜெயச்சந்திரன்  தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நிலப்பட்டா புதிய குடும்ப அட்டை, பட்டாமாறுதல் வேலைவாய்ப்பு கடனுதவி நிதியுதவி இலவச வீட்டுமனைப்பட்டா முதியோர்  உதவித் தொகை காவல்துறை பாதுகாப்பு மற்றும் மின் இணைப்பு என 421 மனுக்களை பொதுமக்கள் வழங்கினார்கள். இம்மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர்   சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு வழங்கி மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.


இக்குறை தீர்வு நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலம் மாற்றுத்திறனாளிகள் நல வாரிய திட்டத்தின் கீழ் இயற்கை மரணம் ஈமசடங்கு திட்டத்தின் கீழ் ரூ.17,000 வீதம் 08 நபருக்கு ரூ.1,36,000-த்தை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இராணிப்பேட்டை மாவட்ட வருவாய் அலுவலர்  ச.ஜெயச்சந்திரன் வழங்கினார்கள்.  இக்கூட்டத்தில் அனைத்து அரசு துறை அலுவலா;கள் கலந்துக் கொண்டனர்.



     


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!