ரூ.30 லட்சம் மதிப்பில் சாலைப்பணிகள்: கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்

திருப்பூர் வடக்கு தொகுதி, திருப்பூர் ஒன்றியத்துக்குட்ப்பட்ட பொங்குபாளையம் ஊராட்சியில் உள்ள கூட்டுறவு நகர் பகுதியில் எம்எல்ஏ தொகுதி வளர்ச்சி நிதி  ரூ.3.50 லட்சம் மதிப்பிலான  பயணியர் நிழற்குடை அமைக்கும் பணிகள், ரூ.26.33 லட்சம் மதிப்பில் மாரப்பன்பாளையம் புதூர் முதல் ஊர் எல்லை வரை ஓரடுக்கு ககப்பி மற்றும் தார் சாலை அமைக்கும் பணிகளை  திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ  அடிக்கல் நாட்டி பணியினை துவக்கி வைத்தார்.


உடன் ஒன்றிய பெருந்தலைவர் சொர்ணாம்பாள் பழனிச்சாமி, துணை சேர்மன் தேவிஸ்ரீ நந்தகுமார், யூனியன் கவுன்சிலர் ஐஸ்வர்யா மகராஜ், பாசறை செயலாளர் சந்திரசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர் மீனாட்சி, பொங்குபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சுலோச்சனா வடிவேல், ஒன்றிய உதவி பொறியாளர்கள் முத்துக்குமார், இளங்கோ,பொங்குபாளையம் ஊராட்சி முன்னாள் தலைவர் மூர்த்தி, முன்னாள் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் கருப்புசாமி, நிர்வாகிகள் வேலுசாமி, துரைசாமி, லோகநாதன், பரமசிவம், ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் ஜெயகுமார், வார்டு உறுப்பினர்கள்  மயில்சாமி உட்பட பல நிர்வாகிகளும் அப்பகுதி பொதுமக்களும் கலந்து கொண்டனர்


 

 

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி