Posts

Showing posts from April, 2022

தூத்துக்குடியில் 28வது கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாம் - ஆட்சியர் செந்தில்ராஜ் தொடங்கி வைத்தார்.

Image
தூத்துக்குடி மாவட்ட அரசு செவிலியர் கல்லூரியில் 28வது கொரோனா மெகா தடுப்பூசி சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், இன்று தொடங்கி வைத்து, கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:  தூத்துக்குடி மாவட்டத்தில் 28வது கரோனா மெகா தடுப்பூசி முகாம் வரும் 30.04.2022 (சனிக்கிழமை) அன்று மொத்தம் 763 மையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள்,  சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் சமுதாய நலக்கூடங்கள் ஆகிய முக்கிய இடங்களில் 763 முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் 50 சிறப்பு முகாம்கள் மற்றும் பேரூராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் 713 இடங்களிலும் தகுதியான அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  தூத்துக்குடி மாவட்டத்தில், இதுவரை 18 வயதிற்கு மேற்படட நபர்களில் முதல்தவணை 1306447 (95சதவீதும்) நபர்களுக்கும், இரண்டாம் தவனை 980059(70.6%) நபர்களுக்கும் மற்றும் ஊக்க தடுப்பூசி 6883 நபர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.  15 முதல் 18...

திரேஸ்புரம் பகுதி திமுக சார்பில் மாநில அளவிலான கபாடி போட்டி விறுவிறுப்பாக தொடங்கியது.!

Image
தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் 69வது பிறந்தநாளை முன்னிட்டு திரேஸ்புரம் பகுதி திமுக மற்றும் பீச் பாய்ஸ் கபாடி கழகம் இணைந்து நடத்தும்  மாநில அளவிலான மாபெரும் கபாடி போட்டி தூத்துக்குடி லுர்தம்மாள்புரம் முன்னாள் மாநகராட்சி துணை மேயர் தொம்மை சேசுவடியான் திடலில் இன்று விறுவிறுப்பாக தொடங்கியது.  இப்போட்டியில் வெற்றி பெரும் அணிகள் நாளை  ஞாயிற்றுகிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் விளையாடுகின்றனர். முதல் நாள் போட்டியில் சிறப்பு விருந்தினராக மாநில காங்கிரஸ் துணைத்தலைவர் சண்முகம், மாநகர் மாவட்ட தலைவர் முரளிதரன், தொழிற்சங்க தலைவர் ராஜு, தொண்டரணி தலைவர் ராஜா, திமுக இலக்கிய அணி துணைச்செயலாளர் நலம் ராஜேந்திரன், கவுன்சிலர் பவாணி மார்ஷல், திமுக வட்டச்செயலாளர்கள் தினகரன், கருப்பசாமி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.   இறுதி போட்டியில் வெற்றி பெரும் அணிகளுக்கு வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் திமுக பொதுக்குழு உறுப்பினரும் மாநகராட்சி மேயருமான ஜெகன் பெரியசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் வெற்றி பெற்ற அணிகளுக்கு...

ராமேஸ்வரத்தில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம்

Image
ராமேஸ்வரத்தில் பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.இதில் ஸ்ரீமத் சேதுராமன் குமரவேல் சுவாமிகள் கலந்துகொண்டு பள்ளிக்கு தேவையான உட்கட்டமைப்பு உபகரணங்கள் வழங்கினார். பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளையும் செய்து தருகிறேன் என்று உறுதி கூறியுள்ளார்.

மீண்டும் சிஎஸ்கே கேப்டன் ஆகிறார் தோனி !!- ஜடேஜா விலகல்.!

Image
சி.எஸ்.கே கேப்டன் பொறுப்பில் இருந்து ஜடேஜா விலகல், மீண்டும் டோனியிடம் ஒப்படைக்க முடிவு #jadeja #Dhoni #IPL #CSK𓃬

ஜாதி அடையாள கயிறு கட்டுவது தொடர்பாக மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் - படுகாயமடைந்த மாணவர் உயிரிழப்பு -3 மாணவர்களுக்கு போலீஸ் வலை

Image
அம்பாசமுத்திரம் அருகே அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்கள் கையில் ஜாதி அடையாள கயிறு கட்டுவது தொடர்பாக ஏற்பட்ட மோதலில் படுகாயமடைந்த மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து 3 மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர். நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள பாப்பாக்குடி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்தவர்கள் முருகன் - உச்சிமாகாளி தம்பதியர். இவர்களுக்கு செல்வசூர்யா (17) என்ற மகனும், பவித்ரா (15) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், செல்வசூர்யா, இடைகாலை அடுத்த பள்ளக்கால் புதுக்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பில் படித்து வந்தார். அதே பள்ளியில் பவித்ரா பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 25ஆம் தேதி செல்வ சூர்யாவுக்கும் அதே பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் அடைச்சாணி மாணவருக்கும் இடையே கையில் கயிறு கட்டுவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது செல்வ சூர்யாவுக்கு ஆதரவாக இரண்டு மாணவர்களும், பிளஸ் 1 மாணவருக்கு ஆதரவாக அதே வகுப்பில் படிக்கும் பள்ளக்கால் புதுக்குடி பகுதியைச் சேர்ந்த 2 மாணவர்களுக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக...

ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமியின் 5,551.27 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் - அமலாக்கத்துறை நடவடிக்கை.!

Image
பிரபல செல்போன் நிறுவனமான ஸியோமி இந்தியா நிறுவனத்தின் 5,551.27 கோடி மதிப்பிலான சொத்துக்களை, அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்து அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்திய அந்நியச் செலாவணி சட்டத்தை மீறியதாக ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமியிடம் இருந்து மத்திய புலனாய்வு அமைப்பான அமலாக்க இயக்குநரகம் (ED) இன்று 5,500 கோடி ரூபாய்க்கு மேல் பறிமுதல் செய்தது. Xiaomi India என்பது சீனாவைத் தளமாகக் கொண்ட Xiaomi குழுமத்தின் முழுச் சொந்தமான துணை நிறுவனமாகும்.  அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம், 1999 இன் விதிகளின் கீழ், நிறுவனத்தின் வங்கிக் கணக்குகளில் இருந்து ரூ.5,551.27 கோடியை ED பறிமுதல் செய்தது. இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நிறுவனம் சட்டவிரோதமாக பணம் அனுப்பியது தொடர்பாக மத்திய புலனாய்வு அமைப்பு விசாரணையை தொடங்கியது. இந்நிறுவனம் 2014 இல் இந்தியாவில் தனது செயல்பாடுகளைத் தொடங்கி, 2015 இல் பணத்தை அனுப்பத் தொடங்கியது. இதுவரை ரூ. 5,551.27 கோடிக்கு சமமான வெளிநாட்டு நாணயத்தை, ஒரு Xiaomi குழும நிறுவனத்தை உள்ளடக்கிய மூன்று வெளிநாட்டு நிறுவனங்களுக்கு ராயல்டி என்ற போர்வையில் அனுப்பியுள்ள...

காண்கிரீட் வேலைக்கு வந்த நபர் திடீர் மரணம்.! - யார்? எந்த ஊர் என முகவரி தெரியாததால் போலீஸ் குழப்பம்.!

Image
இது குறித்து தூத்துக்குடி புதுக்கோட்டை காவல் நிலையம் வெளியிட்டுள்ள செய்தியில்.. கடந்த 20.04.2022 ஆம் தேதி காலை சுமார் 08.00 மணிக்கு, தூத்துக்குடி அரசமரத்தடியில் இருந்து சுமார் 30 வயது மதிக்கதக்க அடையளம் தெரியாத ஆண் நபர் ஒருவர், தினக்கூலியாக புதுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்திற்கு பின்புறம் உள்ள வள்ளிநாயகம் என்பவர் வீட்டிற்கு காண்கிரீட் போடும் வேலைக்கு வந்தார். அவரை தூத்துக்குடி பிரையண்ட் நகர் அம்மன்கோவில் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகன் மணிகண்டன் என்பவர் அழைத்து வந்துள்ளார்.  மேற்படி நபர் பகல் 12.00 மணியளவில் தனக்கு தலைசுற்று வதாக கூறி அருகில் உள்ள மரத்தடியில் படுத்துள்ளார். பின்னர் மணிகண்டன் மற்றும் அவருடன் வேலை பார்த்த கொத்தனார் முருகன் ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்து சென்றுள்ளனர்.  அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சுமார் 30 வயது மதிக்கதக்க அடையளம் தெரியாத அந்த நபர் 20.04.2022-ம் தேதி இரவு 22.45 மணிக்கு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். மேற்படி நபரை வேலைக்கு அழைத்து வந்த மணிகண்டன் பல இடங்களில் தேடியும் இறந்தவருடைய ...

திருமுருகன்பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் தேர்வு

Image
     திருமுருகன்பூண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.  இதில் தலைவர் கவிதா, துணைத்தலைவர்  ராஜேஸ்வரி, தலைமையாசிரியர் இராதா, ஆசிரிய பிரதிநிதி லாவண்யா, பெற்றோர் பிரதிநிதிகள் சுகன்யா, மேனகா, ஷைனி, பரிமளா, ஜலஜா, பாரதி, நாராயணசாமி, உஷாலட்சுமி, அரிச்சந்திரன், சித்ரா, அமுதா, கிரிஜா, உள்ளாட்சி பிரதிநிதிகள் பார்வதி, பூங்கோதை, கல்வி ஆர்வலர் பரமேஸ்வரி, சுயஉதவிக் குழு உறுப்பினர் லோகேஸ்வரி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதன் பார்வையாளராக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜான் கரோலின் அக்சீலியா, வட்டார வளர்ச்சி அலுவலர் புஷ்பவதி ஆகியோர் கலந்து கொண்டு பார்வையிட்டனர். மேலும் இந்நிகழ்வில் முன்னாள் தலைமையாசிரியர் சென்னியப்பன், உள்ளாட்சி பிரதிநிதிகள் முருகசாமி, ராஜன், நடராஜ், தனலட்சுமி ஜோதிமணி  ஆகியோர் பங்கேற்றனர்.

சமத்துவபுரத்தில் உள்ள வீடுகள் பழுது நீக்கம் மற்றும் புதுப்பிக்கும் ஆணையை அமைச்சர் கணேசன் பயனாளிகளுக்கு வழங்கினார்

Image
  கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ கணேசன்  சொந்த ஊரான கழுதூர் கிராமத்தில் தந்தை  பெரியார்  நினைவு சமத்துவபுரத்தில் 2001-ம் ஆண்டு கட்டப்பட்ட  வீடுகள்  பழுது  நீக்கம் மற்றும் புதுப்பித்தல் பணிகளை  மேற்கொள்ள பயனாளிகளிடம்  பணி  ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊராட்சிமன்றதலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். மங்களுர் சேர்மன் கே.என்.டி .சுகுணாசங்கர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி. வெ கணேசன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு ஆணையை வழங்கினார்.  பிளாஸ்டிக் மறுசுழற்சி செய்யும் இயந்திரம் மற்றும் சமத்துவபுரத்தில் உள்ள வீடுகள் சாலைகள் ஆகியவைகளை பார்வையிட்டார். உடன் வட்டாட்சியர் கார்த்திக்,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தண்டபானி,சண்முகசிகாமணி,திமுக மாங்குளம் வெங்கடேசன் அரசுத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திருப்பூர் மாவட்ட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வை கண்டித்து புதிய பஸ் நிலையம் அருகில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

Image
   திருப்பூர் மாவட்ட அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பெட்ரோல் , டீசல் , கேஸ் விலை உயர்வைக் கட்டுப்படுத்தி குறைத்திட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திருப்பூர் மாநகர் மாவட்டம செயலாளர் எஸ் .பி . பிரகாஷ் தலைமை  தாங்கினார். மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் அஸ்வின் நோயல் முன்னிலை வகித்து  பேசினார். திருப்பூர் வடக்கு மாவட்ட செயலாளர் சித்ரவேல், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் கே.டி.எஸ்.ராஜா, வெள்ளக்கோவில் சேகர், திருப்பூர் கிழக்கு மாவட்ட செயலாளர் ரமேஷ், திருப்பூர்  மாநகர் மாவட்ட பொருளாளர் ராமச்சந்திரன், திருப்பூர் மாவட்ட துணைச் செயலாளர்கள்   சுரேந்திரன், ரவீந்திரன் மற்றும் இளைஞர் அணி, வர்த்தக அணி, மாணவர் அணி, மகளிர் அணி   செயலாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். Attachments area                

பந்தய கார் மாடலில் பால் வண்டி - பால் வியாபாரியை சந்திக்க மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா ஆர்வம்!

Image
F1 பந்தயக் கார் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள 3 சக்கர வாகனத்தில் பால் விநியோகம் செய்யும் நபரின் காணொலியை ட்விட்டரில் பதிவிட்டு அவரை சந்திக்க விருப்பம் தெரிவித்துள்ளார் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா! https://twitter.com/RoadsOfMumbai/status/1519522182132469760?t=CvM3Y8nndTfyyc98FpFS5g&s=19 #AnandMahindra  

கொண்டாநகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் தேர்வு

Image
   திருநெல்வேலி மாவட்டம் பாப்பாக்குடி ஒன்றியம் கொண்டநகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் தேர்வு செய்வதற்கான பெற்றோர்கள் கூட்டம் நடைபெற்றது. பாப்பாக்குடி யூனியன் வட்டார வளர்ச்சி அதிகாரி பாலசுப்ரமணியன் தேர்தல் ஆணையராக செயல்பட்டார். ஊராட்சி மன்ற தலைவர் சொர்ணம் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியை செல்வி வரவேற்று பேசினார். வார்டு உறுப்பினர் கணேசன், ஊராட்சி எழுத்தர் முத்துராமலிங்கம் மற்றும் மாணவ மாணவிகளின் பெற்றோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள்  ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டனர். Attachments area

இந்துக் கடவுள்களை அவமதிக்கும் வகையில் 2017ல் சமூக வலைதளத்தில் பதிவு.! - 2022-ல் தலித் ஆர்வலர் கைது.!

Image
இந்துக் கடவுள்களை அவமதிக்கும் வகையில் சமூக வலைதளத்தில் 5 வருடங்களுக்கு முன்பு  பதிவிட்டதற்காக தலித் ஆர்வலர் ஹரோஹள்ளி ரவீந்திராவை சிக்கோடி போலீஸார் கைது செய்தனர். மைசூரில் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட அவர் சிக்கோடிக்குக் கொண்டுவரப்படுகிறார். கைது செய்யப்பட்ட நபர்களை, பயண நேரம் தவிர்த்து, 24 மணி நேரத்திற்குள் ஆஜர்படுத்த குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் வழிவகை உள்ளது. அந்த விதிமுறை பின்பற்றப்படும்” என்று மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்துக் கடவுள்களை அவமதித்ததாகக் கூறப்படும் ரவீந்திரரின் பதிவைத் தொடர்ந்து சிக்கோடியில் வழக்கு (எண் 402 இன் 2017) பதிவு செய்யப்பட்டது. ஐபிசி 295 (எந்த வகுப்பினரின் மதத்தையும் அவமதிக்கும் நோக்கத்துடன் வழிபாட்டுத் தலங்களை காயப்படுத்துதல் அல்லது அசுத்தப்படுத்துதல்) கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டத்தின் கீழ் வழங்கப்படும் அதிகபட்ச தண்டனை இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் அபராதம். இந்த வழக்கில் உள்ளூர் நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்தது. ஐந்து ஆண்டுகளாக, அவர் தலைமறைவாக இருந்ததாகவும், தற்போது மைசூருவில் கண்டுபிடி...

தாளவாடியில் 131 வது அம்பேத்கர் ஜெயந்தி விழா - ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

Image
    ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள மெட்டலவாடி கிராமத்தில்  அம்பேத்கர் அவர்களின் 131 வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அம்பேத்கர் ஜெயந்தி விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு சாம்ராஜ்நகர்  முன்னாள் காங்கிரஸ் எம்.பி துருவ நாராயணன், பவானிசாகர் முன்னாள் எம்.எல்.ஏ  பி.எல்.சுந்தரம் உள்ளிட்டோர் தலைமை வகித்தனர். இந்த அம்பேத்கர் ஜெயந்தி விழாவில் அம்பேத்கர் அவர்களின் வாழ்க்கை வரலாறு, அவர் எழுதிய சட்டங்கள், அவர் அனைத்து மக்களுக்கும் சம நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக அவருடைய போராட்டங்கள், உள்ளிட்டவை குறித்து சிறப்பு அழைப்பாளர்கள் சிறப்புரை ஆற்றினர். இந்த அம்பேத்கர் ஜெயந்தி விழாவில் தாளவாடி காவல் ஆய்வாளர் அன்பரசு, மல்லன்குழி ஊராட்சி மன்ற தலைவர் புட்டுதேவம்மா,ரமேஷ், தாளவாடி வட்டாரத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள், விடியல் இளைஞர் மன்றத்தினர், சேவகன் இளைஞர் மன்றத்தினர், அம்பேத்கர் மக்கள் இயக்கத்தினர் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

மரங்களை வெட்டி வீழ்த்தி சுடுகாட்டில் சுகாதார மையம் அமைக்க முயன்ற திருப்பூர் மாநகராட்சி: பல்லடம் எம்.எல்.ஏ., எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் பொதுமக்கள் போராட்டம்

Image
 திருப்பூர் முருங்கப்பாளையத்தில் சுடுகாட்டில் சுகாதார மையம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்லடம் எம்.எல்.ஏ., எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் பொதுமக்கள் திரண்டு போராட்டம் நடத்தினார்கள்.   திருப்பூர்  மாநகராட்சிக்குட்ப்பட்ட 27 வது வார்டில் உள்ள முருங்கப்பாளையம் சுடுகாடு நூற்றாண்டு காலமாக அந்த பகுதி பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. சுற்றி உள்ள பகுதிகளில் இருந்து  பொதுமக்கள் அந்த பகுதியில் இறந்தவர்களை இங்கு கொண்டு வந்து புதைப்பது வழக்கம். இந்த சுடுகாட்டில் நூற்றாண்டு கடந்த மிகப்பெரிய ஆலமரம் உள்ளது. இது தவிர 50 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான மரங்கள் உள்ளன. இந்த நிலையில் இந்த சுடுகாட்டின் உள் பகுதியில் சுகாதார நிலையம் கட்டுவதாக கூறி இரவோடு இரவாக 50 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான மரங்கள் இரண்டினை வேரோடு வெட்டி வீழ்த்தி விட்டு, அஸ்திவாரத்துக்கு குழி தோண்டப்பட்டதாக குற்றம் சாட்டி பல்லடம் எம்.எல்.ஏ., எம்.எஸ்.எம்.ஆனந்தன் தலைமையில் பொதுமக்கள் திரண்டனர். அவர்கள் அங்கு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.  அப்போது எம்....

பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் 7.27 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம் - அமலாக்கத்துறை நடவடிக்கை.!

Image
பணமோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகர் வழக்கில் சம்பந்தப்பட்ட பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸின் 7.27 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்க இயக்குனரகம் (ED) முடக்கியுள்ளது.  வங்கியின் பிக்சட் டெபாசிட் ரூ 7.27 கோடியை அமலாக்கத்துறை முடக்கியுள்ளதாக தகவல் பணமோசடி வழக்கின் விசாரணையின் ஒரு பகுதியாக வைப்புத்தொகையை இணைத்துள்ள அமலாக்க இயக்குனரகம், ரான்பாக்ஸியின் முன்னாள் விளம்பரதாரர்களின் குடும்பத்தை மோசடி செய்ததாகக் கூறப்படும் 200 கோடி ரூபாயில் இருந்து 5.71 கோடி ரூபாய் மதிப்பிலான பணத்தை ஜாக்குலினுக்கு சந்திரசேகர் பரிசு வழங்கியதாக குற்றம் சாட்டியுள்ளது.

"மே மாதம் வெயில் சுட்டெரிக்க வாய்ப்பில்லை" - இந்திய வானிலை ஆய்வு மையம்

Image
"இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் மே மாதம் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தை போல சுட்டெரிக்கும் வாய்ப்பில்லை, ஆனால் வடக்கு, வடமேற்கு மற்றும் மேற்கு இந்தியாவில் வெப்பம் சாதாரண வெப்பநிலையை விட அதிகமாக இருக்கும்" என இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குநர் ஜெனரல் எம். மோஹபத்ரா, தகவல்

தாளவாடியில் இருந்து கர்நாடகாவிற்கு டூவிலரில் கடத்தபட்ட ரேஷன் அரிசி பறிமுதல்

Image
    தாளவாடியில் இருந்து கர்நாடக மாநிலத்திற்க்கு டூவீலரில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தாளவாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து தாளவாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசு தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் டூவிலரில் ரேஷன் அரிசி மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து  அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தாளவாடி  நேதாஜி சர்க்கிளை சேர்ந்த  மாதேஷ்(47) என்பதும், குறைந்த விலைக்கு தாளவாடி பகுதியில் ரேசன்  அரிசி வாங்கி, கர்நாடக மாநிலத்தில் விற்பனை செய்வதும் தெரியவந்தது. இதனையடுத்து ரேசன்  அரிசி கடத்திய மாதேஷ் மீது வழக்கு பதிவு செய்து,மொபட்டில்  இருந்த 150கிலோ ரேசன் அரிசி   மற்றும் இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். Attachments area

பள்ளி தேடி கொரோனா தடுப்பூசி - மாணவர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டது

Image
 சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஆசிரியை செல்வமீனாள் வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். கண்ணங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் பார்த்திபன் முன்னிலையில் செவிலியர்கள் ஜோசப் மேரி ஊசி செலுத்தினார் . மருந்தாளுனர் கனிமொழி,    மருத்துவ உதவியாளர்கள் சிவக்குமார்,தேவதாஸ்     ஆகியோர் மாணவர்களுக்கு  ஊசி செலுத்த ஏற்பாடுகளை செய்து இருந்தனர். ஆசிரியர் ஸ்ரீதர் நன்றி கூறினார்.

ரசிகர்களை கவரும் ‘பிசாசு 2’ படத்தின் டீசர் வெளியீடு !

Image
         மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளிவந்து வெற்றிகரமாக ஓடிய பேய் படம், ‘பிசாசு.’ அந்த படத்துக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, ‘பிசாசு’ படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது.  இந்த படத்தையும் மிஷ்கினே இயக்கி உள்ளார். நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி, கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.  ராக்ஃபோர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரிக்கும் இப்படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படத்தின் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 'பிசாசு 2' படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்த்திருந்த  இப்படத்தின் டீசர் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.

ரூ.1000 கோடி வசூல் செய்து சாதனை படைத்த KGF 2

Image
பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள கே.ஜி.எஃப் 2 திரைப்படம் உலக அளவில் ரூ.1000 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது தங்கல், பாகுபலி 2, ஆர்.ஆர்.ஆர், கே.ஜி.எஃப் 2 ஆகிய 4 இந்திய படங்கள் மட்டுமே உலக அளவில் ரூ.1000 கோடி வசூல் சாதனையை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடரும் மின்சார ஸ்கூட்டர் தீ விபத்து!- நின்று கொண்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்தது!

Image
ஓசூர் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த ஓகினோவா என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தீப்பிடித்து எரிந்தது! மின்சார பேட்டரியில் பற்றிய தீ மளமளவென பரவி எரிந்து ஸ்கூட்டர் முழுவதுமாக சேதமுற்றது!

சித்திரை அமாவாசை மற்றும் வார விடுமுறையையொட்டி ரமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள் - வெகு நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம்

Image
சித்திரை அமாவாசை மற்றும் வார விடுமுறையையொட்டி இன்று காலை முதல் ஆயிரகணக்கான பக்தர்கள் ராமேஸ்வரத்தில் குவிந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் வெகு நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி பக்தர்கள் தரிசனம் செய்தனர். அமாவாசை தினத்தன்று அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி எள்ளு, பிண்டம் வைத்து தன்னுடன் வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தால் அவர்கள் ஆத்மா சாந்தி அடையும் என்பது ஐதீகம். இன்று சித்திரை அமாவாசை என்பதால் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து நேற்று இரவே ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் வந்து தங்கி இன்று அதிகாலை முதல் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் எதிரே உள்ள அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி அங்குள்ள புரோகிதர்களிடம் எள்ளு, பின்டம் வைத்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். அதனை தொடர்ந்து ராமநாதசுவாமி திருக்கோவிலில் வளாகத்தில் உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் புனித நீராடினர். இன்று ஒரே நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் வந்துள்ளதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. எனவே நீண்ட வரிசையில் வெகு நேரம் காத்திர...

சத்தியமங்கலத்தில் 'பினோ' பேமென்ட் வங்கி துவக்கம்

Image
    சத்தியமங்கலம் ஜீவா மக்கள் சேவை மையத்தின் சார்பில், ராஜீவ் நகரில் 'பினோ' பேமென்ட் வங்கி கிளை துவங்கப்பட்டுள்ளது. வெள்ளிக்கி ழமை நடைபெற்ற விழாவில்,  ஈரோடு-ஈதல் அறக் கட்டளையின்  ஒருங்கிணைப்பாளர் எஸ்.பூங்குன்றன் வரவேற்புரையாற்றினார். ஈதல் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர், எம்.உதயகுமார் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். சத்தியமங்கலம் நகர்மன்றத் தலைவர்ஆர்.ஜானகிராமசாமி, லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.கே.பொண்ணுச்சாமி, மு ன்னாள் சட்டமன்ற உறுப்பினர்  பி.எல்.சுந்தரம், பினோ பேமன்ட் வங்கியின் மண்டல தலைவர். டி.ராகவேந்திரா ஆகியோர் நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளர்களாக வருகை தந்தனர். பல்வேறு டிஜிடல் வங்கி சேவைகளை இந்த பேமன்ட் வங்கியின் மூலம் மேற்கொள்ள இயலும்.  

தேனி மாவட்டத்தில் தமிழக முதல்வர் அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

Image
   தேனி மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் தமிழக முதல்வர்   மு.க.ஸ்டாலின் இன்று தேனி மாவட்டம் அன்னஞ்சி விலக்கில் அமைக்கப்பட்ட விழா மேடையில் உரையாற்றி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மேலும் தேனி மாவட்டத்தில் 112.21 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளையும், 74.21 கோடியில் மதிப்பில் 40 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். அதன் பின்னர் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தேனி மாவட்டம் கலெக்டர் முரளீதரன்,தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி,  மற்றும் வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ் ஆர்.ராமச்சந்திரன், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், மகாராஜன், சரவணகுமார், உப்பட துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும், திமுக நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள்,  பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

பெட்ரோல் டீசல் மீதான தமிழக அரசு வாட் வரி குறைக்க வேண்டும் - இந்து முன்னேற்றக் கழக தலைவர் கோபிநாத் கோரிக்கை

Image
    பெட்ரோல் டீசல் மீதான தமிழக அரசு வாட் வரி குறைக்க வேண்டும்  இந்து முன்னேற்றக் கழக தலைவர் கோபிநாத் கோரிக்கை.   இந்து முன்னேற்ற கழக அலுவலகத்தில் மாநில தலைவர் வக்கீல் கோபிநாத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  தஞ்சாவூர்  தேர் தீ விபத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன், கோவில் திருவிழாவில்  பாதுகாப்பு முக்கியமாகும். எனவே வருங்காலத்தில் கோவில் திருவிழாவிற்கு உள்ளுர் காவல்துறை,  தீயணைப்பு துறை முழு பாதுகாப்பு வழங்க வேண்டும். பெட்ரோல் டீசல் மீதான தமிழக அரசு வாட் வரி குறைக்க வேண்டும். திவிரவாத செயலில் ஈடுபடும்   தண்டனை கைதிகளை கருணை அடிப்படையில் விடுதலை செய்ய கூடாது. திருப்பூரில் பங்களாதேஷ், நைஜீரியன் ஆகியோர் உரிய ஆவணங்கள் இன்றி தங்கி பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் எனவே  காவல் துறையினர் தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கைகள் எடுத்து தொழில் துறையினருக்கு  முழு பாதுகாப்பு வழங்க வேண்டும் .  கோவில் நிலத்தில் அரசு பிற பயன்பாட்டுக்கு பயன்படுத்தும் போது அரசு நிலத்தில் இருக்கும் கோவில்களில் அப்புறப் படுத்துவத...

சேலம் செவ்வாய் பேட்டை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் சித்திரை மாத தேய்பிறை பிரதோஷம்

Image
    சேலம் செவ்வாய் பேட்டை ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் சித்திரை மாத தேய்பிறை பிரதோஷம் முன்னிட்டு நந்திகேஸ்வரருக்கு பால், தயிர், மஞ்சள்,திரு மஞ்சள்,சந்தனம், இளநீர்,தேன்,பஞ்சாமிர்தம், கரும்புச்சாறு போன்றவற்றால் சிறப்பாக அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து வெள்ளி கவசத்தில் காட்சி அளித்தார் . உற்சவர் ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ரிஷப வாகனத்தில் வெள்ளிக் கவச அலங்காரத்தில் திருக்கோவிலினுள்  உள் புறப்பாடு நடைபெற்றது. இதனை தொடர்ந்து சோடச உபசார பூஜை சிறப்பாக நடைபெற்றது . இதனைத் தொடர்ந்து மஹா தீபாராதனை காட்டப்பட்டது.  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பிரதோஷ நாயகனை வேண்டி வழிபட்டனர். கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் விபூதி குங்குமம் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சேலம் மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

Image
   சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  அருகே டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் சேலம் மாவட்டம் சார்பில்  டிஎன்ஜிடிஇயூ மாநிலச் செயலாளர் கே.முருகேசன் தலைமையில் , மாநில செயலாளர் ஏ.முகமதுஅலி முன்னிலையில் , மாநில துணைத் தலைவர் பி.பெரியசாமி, மாவட்ட தலைவர் பி. கணேசன் ஆர்ப்பாட்ட சிறப்புரையாற்றினர்.  மாவட்ட தலைவர் திருமுருகன், மாவட்ட செயல் தலைவர் ஜெயக்குமார், மாவட்ட செயலாளர் முருகேசன், செல்வராஜ், மாவட்ட இணைச்செயலாளர் மாது, மாவட்ட அமைப்பு செயலாளர் கோவிந்தராஜ், லட்சுமணசாமி, சிவப்பிரகாசம் ஆகியோர் ஆர்ப்பாட்ட கருத்துரையாற்றினர்.  தமிழக முதல்வர் அவர்களின் தேர்தல் வாக்குறுதியாக 10 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதியத்தில் பணிபுரிபவர்களை பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற வாக்குறுதியை டாஸ்மாக் பணியாளர்களுக்கு முன்னுரிமை அளித்து பணி நிரந்தரமும் காலமுறை ஊதியம் வழங்க வேண்டியும், டாஸ்மாக் நஷ்டம் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டியும்,  டாஸ்மாக் நஷ்டத்தில் இயங்குவதாக தமிழக அரசு தெரிவித்ததின் பேரில் அது குறித்து வெள்ளை அறிக்கை கேட்ட சங்கத்தின் மாநில தலைவர் தோழர் கு.சரவணன் அவர்களின் ...

சேலம் புதிய பேருந்து நிலையம் எதிரில் ஓமலூர் மெயின் ரோட்டில் ஜூவல்ஒன் பிரமாண்டமான புதிய ஷோரூம் திறப்பு விழா

Image
  பெண்மனதைப் புரிந்த பொன் என்ற தாரக மந்திரத்துடன் திகழ்ந்து வரும் பெண்களின் மனம் கவர்ந்த தங்க நகை ஆபரண பிராண்டும், தமிழகத்தைச் சேர்ந்த எமரால்டு குழுமத்தின் ஒரு அங்கமுமாகிய ஜூவல்ஒன் ஏற்கனவே சேலத்தில் சிறிய இடத்தில் இயங்கி வந்த இந்த ஷோரூம் தற்போது பிரம்மாண்டமாக புதிய இடத்தில் தொடங்கப்பட்டுள்ளது.  இந்தப் புதிய ஷோரூமை எமரால்டு ஜூவல் இண்டஸ்ட்ரி இந்தியா லிமிடெட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் மேலாண் இயக்குனர் கே.சீனிவாசன் , தலைமை செயல் அதிகாரி என்.வைத்தீஸ்வரன் உள்ளிட்டோர் முன்னிலையில் பாரம்பரிய முறையில் குத்துவிளக்கேற்றி ரிப்பன் வெட்டி திறப்பு விழா நடைபெற்றது.  தொடக்க விழா சலுகையாக ஜூவன்ஒன் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு தங்கம் மற்றும் வைர நகைகளை வாங்கும்போது எண்ணற்ற சலுகைகளை வாரி வழங்கி அவர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தவுள்ளது. சலுகைகளின் ஒருபகுதியாக வாடிக்கையாளர்களுக்கு இலவச சில்வர் அக்ஷய விளக்கும் வழங்கப்பட இருக்கிறது. மக்களின் மனம் கவரும் வகையில் உகந்த விலை வைர நகைக் கலெக்ஷனான சியரா பூக்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட நகைக் கலெக்ஷனான அயனா, நீர்வீழ்ச்சியை மையமாகக்...

அரசு வழங்கிய வீட்டு மனையினை அளவீடு செய்து தருமாறு கிராம மக்கள் தாலுக்கா அலுவலகத்தை முற்றுகை

Image
   வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம்  தாலுக்கா அலுவலகத்தில்  முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பகுஜன் சமாஜ்,  வேலூர் மாவட்ட தலைவர் கே.பி. சரவணன் தலைமையில் சுமார் 50 ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்றுகூடி தாலுக்கா அலுவலகத்தினை முற்றுகையிட்டனர். இதனை தொடர்ந்து தாசில்தார் சரண்யா,  தங்களின் கோரிக்கை என்னவென்று கேட்டு, தங்களின் கோரிக்கையினை   மனுவாக எழுதி கொடுக்கும் படி கூறினர்.  இதனை அடுத்து தாசில்தாரிடம் பொதுமக்கள் மனுவினை அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:  கே.வி.குப்பம் அடுத்த முருக்கம்பட்டு  ஊராட்சி முகமதுபுரம் பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றோம்.  இந்நிலையில் கடந்த  2002 ஆம் ஆண்டு இந்த பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்களான எங்களுக்கு வீடு வசதி இல்லாதவர்களில்   150 நபர்களை தேர்வு செய்து அப்போதைய அரசு  கே.வி.குப்பம் ஊராட்சியில் வருவாய் துறையினர் மூலம் பட்டா வழங்கினர். இதனையடுத்து சில ஆண்டுகள்  அதே பகுதியில் வீடுகள் கட்ட சென்றால் சிலர் அராஜகம் செய்ய வருகின்றனர்.  இந்நிலையில் ...

"தேர்வு செய்யப்பட்டுள்ள 300 பேரில் ஒருவர்கூட தமிழர் இல்லை" :நெய்வேலி நிலக்கரி நிறுவன பொறியாளர் பணி தேர்வை ரத்து செய்ய வேண்டும்- திருமாவளவன் வலியுறுத்தல்

Image
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது: நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் GETஎன்னும் பட்டதாரி  பொறியாளர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 300 பேரில் ஒருவர்கூட தமிழ்நாட்டைச் சார்ந்தவரில்லை என்பது அதிர்ச்சியளிக்கிறது.  விண்ணப்பம் செய்வதற்கே வாய்ப்புக் கிட்டாத வகையில் அறிவிப்புச்  செய்ததை ரத்து செய்யக்கோரி CMD அவர்களுக்கு கடந்த 11 ஆம்  தேதி கடிதம் எழுதினேன்.  மனித வளத்துகான பொறுப்பு இயக்குநரிடம் தொலைபேசியில் வலியுறுத்தினோம்.  ஆனால் தேர்வை நடத்தி  முடித்தனர். எதிர்பார்த்ததைப் போல தேர்வானவர்களில் ஒருவரும்  தமிழர் இல்லை.   இந்த தேர்வை ரத்து செய்ய வேண்டுமென இந்திய அரசுக்கு  வேண்டுகோள் விடுக்கிறேன். தமிழ்நாட்டில் உள்ள நிறுவனத்தில் தமிழர் ஒருவருக்கும் வேலை வாய்ப்பில்லை என்பது தமிழக  மக்களுக்கு இழைக்கப்பட்ட துரோகமாகும்.  எனவே இத்தேர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் முறைப்படி அறிவித்து தேர்வை நடத்தி  தமிழர்களை பணியிலமர்த்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்க...

அயோத்தியில் பெரும் கலவரத்திற்கு சதி -மசூதிகளுக்கு முன்பாக பன்றி இறைச்சி, அவதூறான கடிதங்களை வீசி கலவரம் ஏற்படுத்தி நகரையே கொளுத்த சதி செய்ததாக மகேஷ் மிஸ்ரா உட்பட 7 பேர் கைது.!

Image
அயோத்தியில் கலவரத்திற்கு சதி செய்த கும்பலைச் சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மசூதிகளுக்கு முன்பாக பன்றி இறைச்சி , மத அவதூறு நூல்கள் மற்றும் ஆட்சேபனைக்குரிய சுவரொட்டிகளை வைத்து நகரையே தீ வைத்து கொளுத்த இவர்கள் திட்டமிட்டு செயல்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் அயோத்தி போலீஸ் கேப்டன் ஷைலேஷ் பாண்டே கூறுகையில், டெல்லி ஜஹாங்கிர்புரியில் நடந்த கலவரத்திற்கு எதிராக சதித்திட்டம் தீட்டிய மகேஷ் குமார் மிஸ்ரா தான் இந்த முழு சம்பவத்தின் மன்னன் என கூறினார். கைது செய்யப்பட்டவர்கள் 'இந்து யோதா சங்கதன்' என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள், குழுவின் தலைவர், மகேஷ் மிஸ்ரா மீது நான்கு கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் இவர் போலீஸாரின் ரவுடிகள் பட்டியலில் உள்ளவர் என்றும் போலீசார் பிடிஐயிடம் தெரிவித்தனர். https://twitter.com/QuintHindi/status/1520031419686617088?t=kgOvdS_0yIqb0MGot4JGZw&s=19 தாட்ஷா ஜமா மசூதி, கோசியானா மசூதி, காஷ்மீரி மொஹல்லாவில் உள்ள மசூதி மற்றும் குலாப் ஷா பாபா எனப்படும் மசார் ஆகிய இடங்களில் நடந்த சம்பவங்கள் தொடர்பாக நான்க...

"இந்தியாவில் கொரோனோவால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை சரி செய்ய பத்தாண்டுகளுக்கு மேல் ஆகலாம்".!- ரிசர்வ் வங்கி அறிக்கை.!

Image
கொரோனா பாதிப்பால் இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்ட இழப்பை சரி செய்ய பத்தாண்டுகளுக்கு மேல் ஆகலாம் என்று இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட நாணயம் மற்றும் நிதி (Report on Currency and Finance (RCF). தொடர்பான சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த மூன்று ஆண்டுகளில் உற்பத்தியில் இந்தியாவுக்கு ரூ. 50 லட்சம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அறிக்கை கணித்துள்ளது . அந்த அறிக்கை “இந்தியா 2034-35ல் COVID-19 இழப்புகளை சமாளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்று  கூறுகிறது. "தனிப்பட்ட ஆண்டுகளுக்கான உற்பத்தி இழப்புகள் 2020-21, 2021-22 மற்றும் 2022-23 இல் முறையே ரூ.19.1 லட்சம் கோடி, ரூ.17.1 லட்சம் கோடி மற்றும் ரூ.16.4 லட்சம் கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 66% க்கும் கீழே பொது அரசாங்கக் கடனைக் குறைக்க வலியுறுத்தியுள்ளனர். இந்தியாவின் நடுத்தர கால வளர்ச்சி வாய்ப்புகளைப் பாதுகாக்க இது முக்கியமானது என்று அறிக்கை கூறுகிறது. அறிக்கையின்படி, உலகிலேயே மிகப்பெரிய தொற்றுநோயால் ஏற்பட்ட இழப்புகளில் பெரிய அளவில் ஒன்றாக இந்தியா பாதிக்கப்பட்...

"விமானி பற்ற வைத்த சிகரெட்டால் வெடித்து சிதறியது விமானம்" - 66 பேர் பலியான எகிப்து விமான விபத்து குறித்து நிபுணர்கள் அறிக்கை.!

Image
கடந்த 2016ம் ஆண்டு பாரிஸில் இருந்து கெய்ரோ நோக்கிச் சென்ற MS804 ஏர்பஸ் ஏ320 ரக எகிப்து விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 66 பேர் உயிரிழந்தனர். இறந்தவர்களில் 40 எகிப்தியர்களும் 15 பிரெஞ்சு பிரஜைகளும் அடங்குவர். விமானத்தில் இரண்டு ஈராக்கியர்கள், இரண்டு கனடியர்கள் மற்றும் அல்ஜீரியா, பெல்ஜியம், பிரிட்டன், சாட், போர்ச்சுகல், சவுதி அரேபியா மற்றும் சூடான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒரு பயணியும் இருந்தனர். நீண்ட தேடுதலுக்கு பிறகு கிரீஸ் அருகே கடலில் விழுந்த விமானத்தின் கருப்புப் பெட்டி கண்டெடுக்கப்பட்டது. விபத்து நடந்த போது, ​​தீவிரவாத தாக்குதலால் விபத்து ஏற்பட்டதாக எகிப்து அதிகாரிகள் கூறினர். ஆனால் எந்த பயங்கரவாத அமைப்பும் இதற்க்கு பொறுப்பேற்கவில்லை. விமானம் விபத்துக்குள்ளாகி சுமார் 6 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது இந்த விமானம் விபத்துக்குள்ளானதற்கான காரணம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பிரான்ஸ் நாட்டு விமான போக்குவரத்து நிபுணர்கள் வெளியிட்ட 134 பக்கங்கள் கொண்ட அதிகாரப்பூர்வ அறிக்கை கடந்த மாதம் பாரிஸில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அனுப்பப்பட்டது. அந்த அறிக்கையில், ‘எகிப்து விமா...