தூத்துக்குடி: வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணர்வு கூட்டம்.!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின்கீழ் ஒவ்வொரு காலாண்டிலும் நடைபெறும் வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் குறித்த மாவட்ட அளவிலான விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழுக் கூட்டம், ஆதிதிராவிடர் நலக்குழுக்கூட்டம், மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் துப்புரவு தொழிலுக்கான தடை மற்றும் அவர்தம் மறுவாழ்விற்கான சட்டம் 2013 குறித்த விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் மற்றும் பற்றாளர் கூட்டம் ஆகியவை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் குழு சார்ந்த உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் வன்கொடுமைத்தடுப்பு சட்டத்தின் பாதுகாப்பு மற்றம் செயல்பாடு குறித்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் விளக்கி கூறினார். ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் மாணவ மாணவியர் விடுதிகள் மற்றும் பள்ளிகளுக்கு வழங்கப்படும் அரசு திட்டங்கள் சிறப்பாக இருக்க வேண்டும் என்றும...