உடன்குடியில் இருந்து கோயம்புத்தூர் நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் தீ விபத்து - அதிர்ஷ்டவசமாக தப்பிய 38 பயணிகள்.!


தூத்துக்குடி ஓட்டப்பிடாரம் அருகே புதூர்பாண்டியாபுரம்  டோல்கேட் பகுதியில் உடன்குடியில் இருந்து  கோயம்புத்தூர் நோக்கி சென்ற தனியார் ஆம்னி பேருந்தில் தீ பிடித்ததில் 38 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தனர்.

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் இருந்து நேற்று இரவு 8மணிக்கு  கோயம்புத்தூரூக்கு 38 பயணிகள் புறப்பட்டனர். தனியார் ஆம்னி பேருந்து தூத்துக்குடி புதூர் பாண்டியாபுரம் டோல்கேட் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக தீ விபத்து ஏற்பட்டது அப்போது 38 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். இது குறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர். புதியம்புத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்