மோகன்ஸ் அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான பேட்மிண்டன் போட்டி... மாணவ மாணவிகள் அசத்தல்


திருப்பூர் அம்மாபாளையத்தில் உள்ள மோகன்ஸ் பேட்மிண்டன் அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான மாணவ,மாணவிகளுக்கான  பேட்மிண்டன் போட்டி நடைபெற்றது . வெற்றி பெற்ற அனைவருக்கும் திருப்பூர் பேட்மிண்டன் செயலாளர் மோகன் குமார் பரிசுகள் வழங்கினார். 


சிறப்பு விருந்தினராக டி.எம்.எப் மருத்துவமனை டாக்டர் ஜெயராமன் கலந்து கொண்டார். இதில்  11 வயதுக்குட்பட்ட மாணவிகள் பிரிவில் உடுமலைப்பேட்டை மாணவி ஷியாமாஸ்ரீ முதலிடமும், கிட்ஸ் கிளப் சர்வதேச பள்ளியில் பயிலும்,மோகன் அகாடமி மாணவி பவிஷ்னா இரண்டாம் இடம் பிடித்தார்கள். 13 வயது மாணவிகளுக்கான பிரிவிலும் ஷியாமா ஸ்ரீ முதலிடம், தனுஸ்ரீ இரண்டாம் இடமும் பிடித்தார்கள். 15 வயது மாணவிகளுக்கான பிரிவில் ஸ்மிதா ஹசினி முதலிடமும், ஜனனி இரண்டாம் இடம் பிடித்தார்கள். 17 வயது மாணவிகளுக்கான பிரிவில் சங்கமித்தரா  முதலிடமும், ஸ்மிதா ஹாசினி இரண்டாம் இடமும் பிடித்தார்கள், 9 வயது மாணவியருக்கான பிரிவில் நிருல்யா முதலிடமும், சாஸ்னிகா இரண்டாம் இடமும் பிடித்தார்கள்.

9 வயது மாணவர்கள் பிரிவில் வீரனேஷ் ஜெயின் முதலிடமும் ஆகிர் இரண்டாம் இடமும் பிடித்தார்கள். 11 வயது மாணவர்களுக்கான பிரிவில் பிரதீஷ் முதலிடமும், தர்ஷன் இரண்டாம் இடம் பிடித்தார்கள். 13 வயது மாணவர்கள் பிரிவில்  வேதாந்தா முதலிடமும்,தேவனேஷ் ஜெயின் இரண்டாம் இடமும் பிடித்தார்கள்.

15 வயது மாணவர்களுக்கான பிரிவில் நகுலன் கார்த்தி முதலிடமும், வம்சி கெளரிஷ் இரண்டாம் இடம் பிடித்தார்கள்.17 வயது மனாவர்கள் பிரிவில் எஸ்.பி. கிர்திக் முதலிடமும் , ரிபினேஷ்  இரண்டாம் இடமும் பிடித்தார்கள்.  முதலிடம், இரண்டாம் இடம் மற்றும் அரையிறுதிக்கு தகுதி பெற்ற அனைவருக்கும்

பரிசுக்கோப்பை மற்றும்  சான்றிதழ் வழங்கப்பட்டது. லெஜன்ட்ஸ் பேட்மிண்டன் அகாடமி கோச் ராஜா ,மோகன்ஸ் அகாடமி பேட்மிண்டன் கோச் மகேஷ், ராம்திலகா, ஸ்ரீ கோகுல், பிரண்ட்லைன் பள்ளி மாஸ்டர் செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!