Posts

Showing posts from September, 2023

சத்தியமங்கலம் நகராட்சி தினசரி சந்தை வளாகத்தில் விவசாயிகளுக்கு இடம் ஒதுக்கி தர வேண்டும் - நகராட்சி கூட்டத்தில் உறுப்பினர் கோரிக்கை.,

Image
 சத்தியமங்கலம் நகராட்சி, நகர் மன்ற கூட்டம், நகர் மன்ற தலைவர் ஆர்.ஜானகிராமசாமிதலைமையில்  நகராட்சி ஆணையாளர் செல்வம், துணைத் தலைவர் நடராஜ் ஆகி யோர் முன்னிலையில் நடை பெற் றது. கூட்டத்தில் நகர்மன்ற உறுப் பினர்கள் தங்களது வார்டுக்குட்பட்ட பொது மக்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி  பேசினர். கூட்டத்தில் கீழ்கண்ட விவாதங்கள் நடை  பெற் றது.வேலுசாமி(தி.மு.க.):- புதிதாக கட்டப்பட்டு வரும் தினசரி மார்க்கெட் எப்போது திறக்கப்படும் என்றும், தினசரி மார்க்கெட்டில் விவசாயிக ளும், காய்கறிகளை விற்பனைக் காக கொண்டு வருகின்றனர். அவர் களுக்கும் இடம் ஒதுக்கி  தர வேண் டும். அங்கு கழிவுநீர் மற்றும் மழை நீர் வடிகால்அமைக்கப்படவேண்டும் மேலும் மார்க்கெட் வளாக சுற்று சுவரை பராமரிக்க வேண்டும்.  தலைவர் ஜானகி ராமசாமி - பணி கள் தற்போது நடைபெற்று கொண் டிருக்கிறது. விரைவில் மார்க்கெட் திறக்கப்படும். விவசாயிகளுக்கும் உரிய இடவசதி செய்து தரப்படும். முறையான வடிகால் வசதி  அமைக் கப்படவுள்ளது.சுற்றுச்சுவர்அமைக்க ஆய்வு செய்த பின் நடவடிக்கை எடு க்கப்படும். நாகராஜன்-  (கொ.ம.க). டெண்டர் டேவணித் தொகையை ...

பவானிசாகர் கொத்தமங்கலம் ஊராட்சி மன்றம் சார்பாக, ,அரசின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் - எம்.எல்.ஏ. பண்ணாரி துவக்கிவைத்தார்.

Image
ப வானிசாகர் ,கொத்தமங்கலம் ஊராட்சி மன் றம் சார்பாக, அரசின் வருமுன் காப்போம் திட் டத்தின் கீழ் மருத்துவ முகாமினை ,பவானி சாகர் சட்டமன்ற உறுப்பினர் அ.பண்ணாரி பி.ஏ. எம்.எல்.ஏ துவக்கி வைத்தார். முகாமில் அனைத்துவித பரி சோதனைகளுக்கு. தனி  மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன் பெறும் வகையில் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமில், பவானிசாகர் தெற்கு  ஒன்றிய கழகச் செயலாளர் வி.ஏ. பழனிச்சாமி  கொத்தமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் மல்லிகா, , கொத்தமங்கலம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சண்மு கம் , பவானிசாகர் வடக்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளர் எம்.ரவி, பவானிசாகர் வடக்கு ஒன்றிய விவசாய பிரிவு செயலாளர் சோம சுந்தரராஜன், கிளைச் செயலாளர் ராஜகோபால் வார்டு உறுப்பினர்கள்,மாதன் ,ஷர்மிளா, கவிதா, மேலும் செவிலியர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் முகாமில் பங்கேற்றனர்.

சத்தியமங்கலத்தில்,கலைஞர்நூற்றாண்டுவிழாபட்டாமாறுதல்மற்றும்பட்டாபெறுவதற்கானசிறப்பு முகாம்- வட்டாச்சியர் மாரிமுத்து தலைமையில்நடந்தது.

Image
ஈரோடு மாவட்டத்தில் மறைந்த முன்னாள் முதல் வர் முத்தமிழறிஞர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில், வீடற்ற ஏழை எளிய மக்களுக்கு நத்தம் புறம் போக்கு நிலங் களில் பட்டா, ஆதிதிராவிடர்/ பிற்படுத்தப்பட்டோர் நலத் துறைகளின் கீழ் வழங்கப்பட்ட பட்டாவிற்கு இணையவழிப்பட்டா (இ - பட்டா), விளிம்பு நிலை மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா, நகர / நத்தம் நிலவரித்திட்டப்பட்டாக்கள், நத்தம் நிறுத் தம், கணினி திருத்தம்,ஆட்சேபணையற்ற புறம் போக்கில், வரன்முறைப் படுத்தி பட்டா வழங்கு தல், பட் டா மாறுதல் ஆணைகள். வன உரிமைச் சட்டத்தின் கீழான பட்டாக்கள்.வருவாய்ஆவணங்  களில் பிழை திருத்தம் மேற்க் கொள்ளுதல், வரு வாய்த்துறை தொடர்பான பிற மனுக்கள் மற்றும் இதர துறை சார்ந்த மனுக்கள் போன்ற வற்றிக்கும் வருவாய்த்துறையினர் மூலம் விண்ணப்பங்கள் பெற அனைத்து வருவாய் வட்டத்திலும் அமைந்து ள்ள குறுவட்ட நில வருவாய் ஆய்வாளர் அலுவல கங்களில் 29.09.2023 அன்று மனுக்கள் பெறுவதற் கான சிறப்பு முகாம் நடை பெறும்என அறிவித்த தை யொட்டி,.மேற்படி சிறப்பு முகாம் சத்தியமங்க  லம்நில வருவாய் அலுவலர் அலுவலகத்தில், வருவாய் வட்டாச்சியர் (பொ) ...

காவிரி நீர் பிரச்சனை - கர் நாடக பந்த் எதிரொலி - சத்திய மங்கலம் வழியாக கர்நாடக செல்லும் தமிழக வாகனங்கள் பண்ணாரி சோதனை சாவடியில் நிறுத்திவைப்பு -

Image
காவிரி நீர் பிரச்சினை தொடர்பாக, கர்நாடக மாநிலத்தில் நேற்று நடைபெற்ற அடைப்பை ஒட்டி, கர்நாடக மாநில எல்லையோர மாவட்டமான, ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தில் இருந்து, கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் மற்றும் மைசூர் செல்லும் பயணிகள் மற்றும் லாரி போக்கு வர  த்தை 29ம் தேதி ஒரு நாள் பண்ணாரி, திம்பம், கேர் மாளம் சாம்ராஜ் நகர் வழியாக கர்நாடக மாநிலம்  செல்லும் சாலையில் பயணிக்க வேண்டாம் என காவல்துறை அறிவிப்பு வெளியானதை ஒட்டி, ,சத்திய மங்கலம் பேருந்து நிலையம் மற்றும் பண் ணாரி சோதனை சாவடியில் பலத்த போலீஸ் பாது காப்பு போடப்பட்டிருந்தது.பண்ணாரி திம்பம் வழி யாக செல்லும் கர்நாடக மாநில வாகனங்கள் மட்டுமே திம்பம் வழியாக, போலீசார் சோதனை க்கு பின் அனுமதிக்கப்பட்டது.மேலும் திம்பம் மலைப்பாதை வழியாக தாளவாடி செல்லும் பேரு ந்துகள், தலமலை வழி யாக செல்ல அறிவுறுத்தப் பட்டிருந்தது.மைசூர் மற்றும் சாம்ராஜ் நகர் செல்ல வந்த பஸ் பயணிகள் சத்திய மங்கலம் பேருந்து நிலையத்தில் தங்கி இருந்தனர்.கர்நாடக மாநிலம் செல்லும் தமிழக வாகனங்கள்,பண்ணாரி சோதனை சாவடியில் நிறுத்தி வைக்கப்பட்டது.

தியாகி திரு. க.ர.நல்லசிவம் அவர்களின் நூற்றாண்டு விழாவில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ:-

Image
 மொடக்குறிச்சி தொகுதி, கொடுமுடி வட்டம், ஒத்தக்கடையில் உள்ள ரம்யா மஹாலில்அகில இந்திய சோசலிஸ்ட் கட்சியின் முன்னாள் தலைவரும், சுதந்திர போராட்ட வீரரும், தமிழ்நாடு சட்டமன்ற முன்னாள் உறுப்பினரும்,மொழிப்போர் தியாகியுமான,மரியாதைக்குரிய ஐயா தியாகி திரு.க.ர.நல்லசிவம் அவர்களின் நூறாண்டு பிறந்தநாள் விழா இன்று 29.09.2023 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணியளவில் நடைபெற்றது. இவ்விழாவில்  மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி சரஸ்வதி  கலந்து கொண்டு ஐயா அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து வாழ்த்துரை வழங்கினார்கள். இந்நிகழ்வில் பாரதிய ஜனதா கட்சியின் கொடுமுடி கிழக்கு ஒன்றிய தலைவர் கார்த்திகேயன், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், அனைத்து … TAMILANJAL REPORTER : BOOBALAN 8778258704 :   9443655196

சத்தியமங்கலம்,கொமாரபாளையம் ஊராட்சி, செங்கோட்டை நகர் மயானம் செல்ல 5.20 இலட்சம் மதிப்பீட்டில், அணுகுசாலை - பூமி பூஜை.

Image
 கொமாரபாளையம் ஊராட்சிக்குட் பட்ட  செங்கோட்டை நகர் பொது மக்கள்கொமாரபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் S.M.சரவணன் அவர் களிடம்,மயானம் செல்ல அணுகு சாலை வேண்டும் என்றுகோரிக்கை வைத்ததின்பேரில்,கோரிக்கையை ஏற்று MGNREGA திட்டத்தின் கீழ்,ரூ,5. 20 இலட்சம் மதிப்பீட்டில் காங்கிரிட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது, ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம் .சரவணன் தலைமையேற்று, பூமி பூஜையை  துவக்கி வைத்தார்,  உடன் ஒன்றிய குழு உறுப்பினர் சத் யா பழனிச்சாமி துணைத் தலைவர் ரமேஷ், வார்டு உறுப்பினர்கள் ரத் னா செல்வம், வடிவேலு,சாவித்திரி ரங்கராஜ், நெசவாளர் கூட்டுறவு சங்க தலைவர் நாகராஜ்,வளர்ச்சி குழு உறுப்பினர் ராசு மற்றும்நாகப் பன்,முனுசாமி,சித்தப்பன்,நாகராஜ்,பழனிச்சாமி,ஊராட்சிசெயலாளர்   குமார் மற்றும் ஊர் பொது மக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப் பித்தனர்.

நீலகிரியில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி பொதுமக்கள் சாலை மறியல்

Image
நீலகிரி மாவட்டம் பந்தலூர் தாலுகா சேரம்பாடி கோரஞ்சால் சப்பன்தோடு என்ற பகுதியில் குமார்(43) என்பவரை  பகல் 3 மணி அளவில்  காட்டு யானை தாக்கியது இதில் பலத்த காயம் அடைந்த குமாரை  மீட்டு வனத்துறையினர் மருத்துவமனைக்கு  கொண்டு சென்றனர் இந்நிலையில் கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார் இவரை சேரங்கோடு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் போஸ் மற்றும் வார்டு உறுப்பினர் வினோத் பந்தலூர் அரசு மருத்துவமனைக்கு சென்று நேரில் ஆய்வு செய்தனர் மேலும் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து வனவிலங்கு மற்றும் மனித மோதல் தொடர்கதையாகவே உள்ளது இதனை தடுக்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தும் எந்த விதமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாற்றி உள்ளனர் மேலும் தமிழக முதலமைச்சர் மற்றும் வனத்துறை பொதுமக்களை பாதுகாக்க விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

ஓசூர் தமிழ்நாடு விசுவ இந்து பரிஷத் சார்பாக நன்றிகளும் வாழ்த்துக்களும்

Image
ஓசூரில் தமிழ்நாடு விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சார்பாக நடைபெற்ற விநாயகர் விசர்ஜன மற்றும் இந்து எழுச்சி பெருவிழாவில்  வேதாந்தம்  அவர்களின் ஆணைகிணங்க  ஆர்.ஆர்.கோபால்  அவர்களின் வழிகாட்டுதலில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட  சாய் விபூதி அம்மா மற்றும் கோவை ஸ்ரீ ராஜ தேவேந்திரா சுவாமிகள் மேலும் வழிகாட்டியான பொது செயலாளர் சோமசுந்தரம்  மாநில இணை பொதுச் செயலாளர்  கோவை விஜயகுமார் நாமக்கல் சபரிநாதன்   சேலம் அருள்  கலந்து கொண்டு சிறப்பி்த்தனர்  மாவட்டத்தின் தூண்கள் நரசிம்மன் மஞ்சுசுவாமி, கங்காதரன், வெங்கடேஷ்,சுதா, சந்தோஷ், சின்னா,ரவி,உதய் வெங்கடேஷ், பிரவீன்,மணிகண்டன்,  பெரியசாமி, சசி, மூர்த்தி  ஆகியோர் முன்னேற்பாடுகள் செய்து விழாவினை வெற்றி செய்ய வழிவகுத்த அனைத்து இந்து மக்களுக்கும் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம் என்று ஓசூர் தமிழ்நாடு விசுவ இந்து பரிசத் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்

சத்தியமங்கலம்,கொமாரபாளையம்,அருள்மிகு ஸ்ரீ சித்திவிநாயகர் திருக்கோயில் 29 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்திவிழா-வெகுவிமர்சையாக கொண்டாட்டம்.

Image
 ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், ம.கொமாரபாளையம் அருள்மிகு, ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோயில் 29 ஆம் ஆண்டு சதுர்த்தி விழா, புரட் டாசி மாதம் 1ம் நாள் 18.9.23 திங்கட் கிழமை காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன்,விநாயகர்திருவுருவ சிலை பிரதிஷ்டை  செய்து, அன்று  மாலை சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை நடை பெற்றது. 19.09.23 முதல் நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில், சிறப்பு அலங்கார பூஜையுடன்,விநாயகபெருமானுக்கு கொலுக்கட்டை, இனிப்பு, பலகாரம். பொங்கல்மற்றும்சுண்டல் படைத்து சிறப்பு பூஜைகள் நடை பெற்றன. 24ம் தேதி ஞாயிற்றுகிழமை காலை 7 மணிக்கு, சித்திவிநாயகருக்கு 108 குடம் தண்ணீர் ஊற்றி, பூஜை வழி பாடு நடைபெற்றது பின்னர் பகல் 12 மணி அளவில், சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜையுடன் மஹா தீபா ராதனை நடைபெற்றது. இதில் 500க் கும் மேற்பட்ட பக்தர்கள், கலந்து கொண்டுஅருள்மிகு,சித்திவிநாயக பெருமானை வழிபட்டனர். பின்னர் கோவிலில் மஹா அன்னதானம் நடைபெற்றது. மாலையில், விநாயகபெருமானின் திருவுருவச் சிலை, புஷ்ப அலங்கார த்துடன், அலங்கரிக்கப்பட்ட வாகன த்தில், கொமாரபாளையம் கிராமத் தில், திருவீதி உலா வந்து, இரவு பவானி ஆற்றில் வி...

மாபெரும் இலவச மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ:

Image
 அறம் அறக்கட்டளை, சி.கே. மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிட்டல் மற்றும் தி ஐ ஃபவுண்டேஷன் ஆகியோர் இணைந்து மொடக்குறிச்சி ஒன்றியம், கணபதிபாளையம் ஊராட்சி சுற்றுவட்டார  மக்களுக்காக நடத்தப்பட்ட மாபெரும் எலும்பு முறிவு, தண்டுவட சிகிச்சை, இலவச பொது மருத்துவம் மற்றும் இலவச கண் சிகிச்சை முகாம் இன்று 24-09-2023 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில் கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.  இம்முகாமில் நமது மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி.சரஸ்வதி அவர்கள் மற்றும் அறம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் கிருத்திகா சிவ்குமார் அவர்கள்  கலந்து கொண்டு மருத்துவ முகாமை துவக்கி வைத்தார்கள். சி.கே. மெடிக்கல் சென்டர் ஹாஸ்பிடல் டாக்டர்.தினேஷ் (எலும்பு முறிவு சிறப்பு மருத்துவர்) முகாமிற்கு வந்திருந்த மக்களுக்கு   மருத்துவ ஆலோசனைகளை வழங்கினார்கள். முகாமில் கலந்த கொண்டவர்களுக்கு எக்ஸ்ரே இலவசமாக எடுக்கப்பட்டது. மருத்துவ ஆலோசனை பெற்றவர்களுக்கு கட்டணம் இல்லாமல் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. இந்த மருத்துவ முகாமில் 100க்கும் மேற்பட்டோர் மருத்துவ ஆலோசனைகளை பெற்றனர். TAMIL ANJ...

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்ட வளர்ச்சி பணிகள். - -

Image
 கோவை கவுண்டம்பாளையம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட கள்ளிப் பாளையம் ஊராட்சி பெத்த நாயக் கன் பாளையம் கிராமத்தில், சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம் பாட்டு நிதியிலிருந்து, ரூ:15 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை மற்றும் வடி கால் அமைக்கும் பணிககு, அதிமுக ,கோவை புறநகர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், கவுண்டம் பா ளையம் சட்டமன்ற தொகுதி உறுப் பிருமான், பிஆரஜி அருண் குமார் _ எம்.எலஏ முன்னிலையில், பூமி பூஜை நடைபெற்றது உடன் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், அதிமுக கட்சி நிர்வாகிகள் , வார்டு உறுப்பினர்கள் ,அதிமுக கட்சியின்ர் மற்றும் பொது மக்கள் உடன் இருந்தனர்

பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், அனைத்து விதமான சான்றுகள் பெற சேவை மையத்தை அணுகலாம்- எம்.எல்.ஏ. பண்ணாரி தகவல்.

Image
பவானிசாகர் சட்டமன்றத் தொகுதி, பொதுமக்கள் அனைவரும்,அரசின் மகளிர் உரிமைத் தொகை, ரூபாய் 1000 பெற விண்ணப்பித்து, மனுக் கள் நிராகரிக்கப்பட்டவர்கள், தங்க ளது,ரேஷன் கார்டு, ஆதார் கார்டு அலைபேசி ஆகிய மூன்று விபரங்க ளுடன்,சத்தியமங்கலம் பகுதியில் இயங்கி வரும்,பவானிசாகர் சட்ட மன்றத் தொகுதி, சட்டமன்ற உறுப் பினர்  அலுவலகத்திற்கு நேரில் வந்து,விண்ணப்பங்கள்( ஏற்கனவே விண்ணப்பிக்கப்பட்டு. விண்ணப்ப  ங்கள் அரசினால் நிராகரிக்கப்பட்ட வர்களுக்கு மட்டும் )நிராகரிக்கப் பட்டதன் காரணங்கள் கண்டறிந்து, இலவசமாக மறு விண்ணப்பம் செய்யவும் மேலும் அரசுக்கு இணை ய வழியில் (online) விண்ணப்பிக் கும் முதியோர் உதவித்தொகை, வருமானச் சான்று, சாதிச்சான்று, இருப்பிடச் சான்று, உள்ளிட்ட பல் வேறு வகையிலான சான்றுகளை பெற,பவானிசாகர்சட்டமன்ற தொகு தி பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக, விண்ணப்பம் செய்து தரப்படும் என்பதையும், இவ்வாய்ப் பினை தவறாமல் அனைவரும் பய ன் படுத்திக் கொள்ளுமாறு  பவானி சாகர் சட்டமன்றஉறுப்பினர் அ. பண் ணாரி பி.ஏ.எம்.எல்.ஏ. தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம், பவானிசாகரில் மாற்றுதிறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்.

Image
ஈரோடு மாவட்டம், பள்ளிக்கல்வித் துறைசார்பில், பவானிசாகர் ஒன் றிய, அனைத்துவகை மாற்று திற னாளி கள் பயனடையும் வகையில், மாற்றுத்திறனாளிகளுக்கான இல வச பொது மருத்துவ முகாம்,பவா னிசாகர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. மருத் துவ முகாமினை, பவானிசாகர் பேரூராட்சி தலைவர்  டி.ஏ.மோகன் துவக்கி வைத்தார். மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர்  ஏ.இரா தாகிருஷ்ணன் மற்றும்  மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவ லர் கோதை செல்வி ஆகியோர் முகாமில் பங்கேற்று, நலத் திட்ட உதவிகளை வழங்கினர்.முகாமில் மொத்த மாற்றுத்திறனாளி மாண வர்கள் 110 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர். புதிய அடையாள அட்டை 20 நபர்களுக்கும்,16 குழந் தைகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது. மேலும் காது கேட் கும் கருவி ஐந்து பேருக்கும்,  புதிய அடையாள அட்டை 20 பேருக்கும் வழங்கப்பட்டது. 

"தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.ஆர் சேகர் அறிக்கை""!

Image
"தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.ஆர் சேகர் அறிக்கை"!!   96 சதவீத ஹிந்துக்கள் படிக்க அருட்தந்தையர் தான் காரணம் !  அப்படியாயின் அவர்கள் படிக்காமல் போனதற்கு யார் காரணம் ? திமுக எப்போதும் மற்றவர்களின் திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வதை நாம் பார்த்து வருகிறோம் !! முதலில் மத்திய அரசின் திட்டங்கள் மீது தங்கள் ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டார்கள் ! காமராஜர் போன்ற தேசியவாத சிந்தனை கொண்ட தலைவர், கல்வி புரட்சி செய்ததையும் திராவிட இயக்கங்கள் செய்ததுபோல ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டார்கள் ! இப்போது அந்த கல்வி கற்றதே அருட் தந்தையரின் தயவால் என்று மடை மாற்றுகிறார்கள் ! சபாநாயகர் என்ற பொறுப்பில் இருந்து கொண்டு , தமிழக வரலாற்றை இந்த அளவுக்கு மாற்றி பேசுவது கண்டிக்கத்தக்கது ! சனாதன தர்மம் உச்சத்தில் இருந்த சேர சோழ பாண்டிய காலத்தில் , ஆண் பெண் பேதமின்றி , குல வேறுபாடுகள் இன்றி, அனைவருக்கும் கல்வி கிடைத்ததை குறிக்கும் வகையில் சேக்கிழாரின் திருத்தொண்டர் புராணத்தில், பரஞ்சோதியார் பற்றிய வரிகள் இருப்பது அப்பாவு அவர்களுக்கு எப்படி தெரியும் ? அப்படி பார்த்தால் , கிறிஸ்தவர...

*ஊர்க்காவல் படையினரின் மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் கனிவு பார்வைப்பட *சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள்!*

Image
*ஊர்க்காவல் படையினரின் மீது   முதல்வர் மு.க.ஸ்டாலின் கனிவு பார்வைப்பட  *சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள்!*                       தமிழ்நாடு முழுவதும் சுமார் 16 ஆயிரம் ஊர்க்காவல் படையினர் ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் இணைந்து பணியாற்றி வருகிறார்கள். தமிழ்நாடு காவல்துறைக்கு உதவியாக சாலை பாதுகாப்பு, போக்குவரத்து சீரமைப்பு, திருவிழாக்கள, அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்கள், பேரிடர் காலங்களில் உதவிடுதல், பொது மக்களுக்கு விழிப்புணர்வுகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட சேவையை ஆற்றுகின்ற ஊர் காவல் படையினரை ஊக்கப்படுத்தி அவர்களின் குடும்ப பொருளாதார மேம்பாட்டிற்கு உதவிடும் நோக்குடன், தற்பொழுது தமிழ்நாட்டில் அவர்களுக்கு கொடுக்கப்படுகின்ற பணி நாட்கள் ஐந்து என்பதை உயர்த்தி குறைந்தது மாதத்திற்கு 25 நாட்களாக அறிவிக்க வேண்டும். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஊர் காவல் படையினருக்கு 30 நாட்கள் பணி வாய்ப்பு  வழங்கப்பட்டு சிறப்புடன் செயல்பட்டு வருவது என்பது குறிப்பிடதக்கதாகும். 30 பணி நாட்களுடன் நமது அண்டை மாநிலங்களான...

உயிரைப் பறிக்கும் ஷவர்மா உணவு வேண்டாம்! உஷாராக உணவருந்த சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள் !

Image
*உயிரைப் பறிக்கும்   ஷவர்மா உணவு வேண்டாம்! உஷாராக உணவருந்த சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள் !*   ஷபர்மா மாமிச உணவு சாப்பிட்டதால் கடந்த ஆண்டு கேரளாவில் இளம்பெண் ஒருவர் மரணம் அடைந்ததை, தொடர்ந்து விழிப்புணர்வு தோன்றியது. தமிழகத்தின்  நாமக்கல்லில்  ஷவர்மா சாப்பிட்ட14 வயது சிறுமி கலையரசி மரணமுற்ற செய்தி மிகவும் சோக அதிர்வலைகளை ஏற்படுத்தியதால், விழித்துக் கொண்ட உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அசைவ உணவகங்களில் சோதனையிட்டு அழுகிய கெட்டுப்போன இறைச்சிகளை கைப்பற்றி அகற்றி அழித்து  வருகிறார்கள். ஒரு மரணம் ஏற்பட்ட பிறகு தான் அதிகாரிகள் விழித்தெழுகின்ற செயல் ஒவ்வொரு சம்பவத்திலும் பார்க்க முடிகின்றது என்பது துரதிஷ்டவசமானது. ஷவர்மாவில் பயன்படுத்தப்படும் மாமிசம் குளிர்ச்சியான சூழலில் வைக்கப்பட்டு பின்னர் சூடுபடுத்தப்படுகிறது. இதனால் அந்த இறைச்சி சரியாக வேகாமல் கிளாஸ்ட்ரிடியம் எனும் பேக்டீரியாவை இறைச்சியில் உருவாக்குகிறது. இது போட்டுலினம் டாக்ஸினாக மாறுகிறது. ஆயினும் அதிக வெப்பநிலையில் அந்த பாக்டீரியா உயிருடன் இருக்காது...

ஈரோடு மாவட்டம்.சத்தியமங்கலத்தில் இந்து முன்னனி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா-

Image
 ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத் தில் சத்திநகரம் மற்றும் சத்தி கிராம புற பகுதிகளில், விநாயகர் சதுர்த்தி யை முன்னிட்டு,பிரதிஷ்டை செய்ய ப்பட்ட விதாயகர் சிலைகள், சத்திய மங்கலம் எஸ்.ஆர்.டி. கார்னர் பகுதி க்கு, அலங்கரிக்கப்பட்ட 70 க்கும் மேற்பட்ட வாகனங்களில் எடுத்து வரப்பட்டன. பின்னர் நடைபெற்ற விசர்ஜன ஊர்வலம், இந்து முன் னனி மாவட்டத் தலைவர் குருசாமி தலைமையில் நடைபெற்றது. ஊர்வத்தை மருத்துவர் நாகராஜ் குத்து விளக்கு ஏற்றியும்,  சத்தி நகர அதிமுக செயலாளரும், முன்னாள் நகர்மன்றத் தலைவரு  மான ஓ.எம்.சும்பிரமணியம் கொடி யசைத்தும் ஊர்வலத்தை துவக்கி வைத்தனர். ஊர்வலம் மைசூர் டிரங்க் ரோடு, எஸ்.பி.எஸ் கார்னர், போலீஸ் ஸ்டேசன் வழியாக, தபால் ஆபிஸ் ரோடு, கோட்டு வீராம்பாளை யம் சாலை வழியாக, பழைய மார்க் கெட், கடைவீதி வழியாக, பெரிய பள்ளிவாசல் வீதி, சத்யா தியேட்டர் ரோடு, வரதம்பாளையம், திப்பு சுல் தான் ரோடு, வடக்கு பேட்டை, அத் தாணி ரோடு வழியாக சென்று, ஆற்று பாலம் சித்திவிநாயகர் கோவில் படித்துறையை அடைந்து, பவானி ஆற்றில் விநாயகர் சிலை களை கரைத்தனர்.நடுநிசியை தாண்டியும் நடைபெற்ற ஊர்வலத் தை, சாலையின் இருபுறம...

கோவை தெற்கு RTO அலுவலகம் சார்பில் நுகர்வோர் காலாண்டு கூட்டம்

Image
கோவை தெற்கு RTO அலுவலகம் சார்பில் நுகர்வோர் காலாண்டு கூட்டம் நடைபெற்றது இதில் கோவை நுகர்வோர் மையம் சார்பில் அதன் தலைவர் வெங்கடேசன் கலந்து கொண்டு நுகர்வோர் சார்பில் பல கோரிக்கைகளை முன் வைத்தார் அதில் தனியார் பேருந்துகளில் அதிக சத்தம் எழுப்பும் ஏர்ஹார்ன் மற்றும் அதிவேகமாக பொதுமக்களை அச்சுறுத்தும் விதத்தில் பேருந்துகளை இயக்குவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், பள்ளி நேரத்தில் மாணவ மாணவிகளை ஏற்றிசெல்லாத அரசு பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் RTO அலுவலகத்தில் புரோக்கர் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த கோரியும் நுகர்வோர் சார்பில் பல புகார்கள் வைக்கப்பட்டது கூட்டத்தில் தெற்கு  மேற்கு வடக்கு மையம் உள்ளிட்ட RTO அவர்களும் தனியார் பேருந்து உரிமையாளர்களும் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளும் கலந்துகொண்டனர்

அறம் அறக்கட்டளை சார்பில் புனரமைக்கப்பட்ட கனகபுரம் நூலக கட்டிடம் திறப்பு விழாவில் மொடக்குறிச்சி எம்.எல். ஏ...

Image
 ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதி, கனகபுரம் ஊராட்சியில் உள்ள நூலக கட்டிடம் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் அறம் அறக்கட்டளை சார்பில் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.  இந்நிகழ்வில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி  மற்றும் அறம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் திருமதி கிருத்திகா சிவ்குமார்  கலந்துகொண்டு நூலகத்தினை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்கள்.   இந்நிகழ்வில் கலந்து கொண்ட அரசு பள்ளி மாணவர்களிடம் புத்தகம் வாசிப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர் . பின்பு நூலகத்தின் முன்பு மரக்கன்றுகள் நடப்பட்டது. மேலும் அறம் அறக்கட்டளையின் சார்பில் நூலகத்திற்கு தேவையான புத்தகங்கள் வழங்கப்பட்டது.     இவ்விழாவில் மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர், கனகபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் செயலாளர், பள்ளியின் ஆசிரியர் மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். TAMIL ANJAL REPORTER BOOBALAN 9443655196 ; 8778258704

கோவை இருகூரில் விநாயகர் சதுர்த்தி விழாவில் புல்லட்டில் ஊர்வலம் வந்த விநாயகர்

Image
கோவை இருகூர் விஸ்வ ஹிந்து பரிஷத் தமிழ்நாடு சார்பாக விநாயகர் சதுர்த்தி தினமான இன்று புல்லட் விநாயகர் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது நிகழ்ச்சிக்கு தலைமை சிதம்பரம் மாவட்ட செயலாளர் மற்றும் கிளை நிர்வாகிகள் இன்று மாலை மாநில துணை பொது செயலாளர் வழக்கறிஞர் விஜயகுமார் உள்ளூர் ஊர்வலத்தில் காவிகொடியை துவக்கி வைத்தார் முன்னிலை சக்திவேல் மாவட்ட தலைவர் மற்றும் கணேஷ் உட்பட 500க்கும் மேற்பட்டோர் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். புல்லட் விநாயகரை அதிகமான மக்கள் பார்த்து ஆச்சரியப்பட்டு பிரார்த்தனை செய்து சென்றனர்.

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.ஆர் சேகர் அறிக்கை

Image
 உடையும் திராவிட புரட்டுகள் !!!  சமஸ்கிருதம் மாணவர்களுக்கு கட்டாயம் ஆக்கப்படுகிறது !!! மகிழ்ச்சியான செய்தி !! அதுவும் எதனால் கட்டாயம் ஆக்கப்ப்படுகிறது என்பதில் தான் பூரண மகிழ்ச்சி !! நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களை மதிக்க கற்றுத் தர வேண்டும் என்ற நோக்கத்தோடு சமஸ்கிருதம் கட்டாயம் ஆக்கப் படுகிறது !! உத்தரகாண்ட் மாநிலத்தில் மதராசாக்களில் சமஸ்கிருதம் மற்றும் அரபு மொழி கட்டாயம் ஆக்கப்படும் என்று மாநில வக்ஃபு வாரிய தலைவர் அறிவித்து இருப்பதை பாஜக வரவேற்கிறது !!! எப்படி தமிழ் மொழி , இந்த தமிழ்ச் சமூகத்தின் தொன்மையையும், பாரம்பரியத்தையும் தன்னுள் அடக்கியுள்ளதோ , அதே போல இந்த பாரத நாட்டின் தொன்மையையும் பெருமையையும் பாரம்பரியத்தையும் சமஸ்கிருத மொழி தன்னுள் அடக்கியுள்ளது என்ற புரிதலின் அடிப்படையில் தான் இந்த அறிவிப்பு வந்து இருக்க வேண்டும் !! சமஸ்கிருதம் என்பது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கான மொழி அல்ல !!! அது அனைவருக்கும் பொதுவான மொழியாக தான் இருந்தது என்பதற்கு பல வரலாற்று சான்றுகள் உள்ளன !! குறிப்பாக உத்திரமேரூர் கல்வெட்டில் , தமிழ் மொழியையும் சமஸ்கிருதத்தையும் கற்றுண...

கோவை சூலூரில் அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கொடியேற்று விழா

Image
கோவை சூலூரில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 115வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சூலூர் பேரூராட்சி 8வது வார்டு கழகத்தின் சார்பில் சூலூர் நகர செயலாளர் K.கார்த்திகைவேலன்  தலைமையில், சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர்  G.குமரவேல்  முன்னிலையில் 8-வது வார்டு KRMS மல்லிகை கார்டன் பகுதியில் சூலூர் சட்டமன்ற உறுப்பினர்  V.P.கந்தசாமி MLA அவர்கள் கழக கொடியேற்றி இனிப்பு வழங்கி சிறப்பித்தார். விழா ஏற்பாடு சூலூர் 8வது வார்டு கழகச் செயலாளர் S.அருண்குமார் செய்திருந்தார் உடன் சூலூர் தெற்கு ஒன்றிய IT wing தலைவர் R.பிரபு நாராயணன், Ex.VAO.மகாலிங்கம், மல்லிகை கார்டன் தலைவர் ராஜமாணிக்கம், இமானுவேல், பாலு, மணிகண்டன், விக்னேஷ், விக்கி மற்றும் கழகத்தில் தன்னை இணைத்து கொண்ட ஜான் அவர்கள் மற்றும் நகர கழக நிர்வாகிகள்  கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மகளிர் உரிமை திட்டம் மிகவும் பாராட்டுக்குரியது!* முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் நெஞ்சார்ந்த நன்றி!!*

Image
*மகளிர் உரிமை திட்டம்  மிகவும்  பாராட்டுக்குரியது!*  *முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு   சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் நெஞ்சார்ந்த நன்றி!!*          தமிழ்நாடு அரசின் சார்பில் ஒரே நேரத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் பெறக்கூடிய கலைஞர் மகளிர் உரிமை திட்டம் வருகின்ற செப்டம்பர் 15 ஆம் தேதி அறிஞர் அண்ணா பிறந்த நாளிலிருந்து  செயல்படுத்தப்பட உள்ள சூழலில் இத்திட்டத்தை செயல்படுத்தும் தமிழக அரசினையும், முதல்வர் மு. க. ஸ்டாலினையும் நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. ஒவ்வொரு முதல்வரும் புதுப்புது திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார்கள். அவ்வரிசையில் இந்த ஆட்சியில் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி பெண்களுக்கு அதாவது குடும்பத் தலைவிகளுக்கு     மாதந்தோறும் ஆயிரம் வழங்கப்படும் என்ற அறிவிப்பின் அடிப்படையில் அத்திட்டம் தற்பொழுது செயல்படுத்தப்பட உள்ளது என்பது  நிச்சயமாக பெண்களுக்கு பேருதவியாக இருக்கும். நேரடியாக பெண்களுக்கு ...

நம்பியூர் பேரூராட்சியில் வார்டு குழு மற்றும் பகுதி சபா கூட்டம்.

Image
 நம்பியூர் பேரூராட்சியில் உள்ள பகுதிகளில் வார்டு குழு மற்றும் பகுதி சபா கூட்டம் பேரூராட்சி தலைவர் மெடிக்கல் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது.  பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு விரைவில் உரியநடவடிக்கை எடுக்கப்படும் என நம்பியூர் பேரூராட்சி தலைவரும் ஒன்றிய செயலாளருமான மெடிக்கல் செந்தில்குமார் கூறினார்.  இதில் ஒன்றிய துணைச் செயலாளர் வேலுச்சாமி,பேரூராட்சி 8 ஆவது வார்டு கவுன்சிலர் லட்சுமி சண்முகம், வார்டு செயலாளர் என்.எஸ்.ஆனந்தகுமார்,ஒன்றிய இளைஞரணி ராஜ்குமார்,பாசில், மற்றும் அதிகாரிகள் ,பொதுமக்கள் என ஏரளமானோர் கலந்து கொண்டனர். செய்தியாளர்.எம்.மாரிச்சாமி 9080602161

மொடக்குறிச்சி பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட மொடக்குறிச்சி எம் எல் ஏ..

Image
 ஈரோடு மாவட்டம் முகாசி அனுமன்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு விலையில்லா மிதிவண்டி  வழங்கும் நிகழ்ச்சியில்  மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர்  சி  சரஸ்வதி கலந்து கொண்டு 94 மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கி வாழ்த்து பேசினார்.  மொடக்குறிச்சி பேரூராட்சி ஓலப்பாளையம் அங்கன்வாடி மையத்தில் அமைந்துள்ள முன்பகுதியில் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி சரஸ்வதி அவர்களால் பூங்கா அமைத்து தரப்பட்டுள்ளது.  மொடக்குறிச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்  மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி 115 மாணவிகளுக்கு வழங்கி வாழ்த்து பேசினார்.  கணபதிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின்விலையில்லா மிதிவண்டி 175 மாணவ மாணவிகளுக்கு வழங்கி வாழ்த்து பேசினார்.   அவல்பூந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர் திருமதி கா பழனியம்மாள் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறை சார்பில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது (2022-2023)  பெற்ற இவரை நேரில் சந்தித்து  கௌரவித்தார். ...

மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையங்களில் அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதி! உடனே ஏற்படுத்தி தர சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!

Image
*மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையங்களில் அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் அவதி!   உடனே ஏற்படுத்தி தர சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை!!                    மயிலாடுதுறையில் 1965ல் கட்டப்பட்ட காமராஜர் பேருந்து நிலையமும், நகரப் பூங்காவில் தற்காலிகமாக இயங்கி வரும் பேருந்து நிலையத்தில் இருந்தும் நாளொன்றுக்கு சுமார் 500 பேருந்துகள் 3000 முறை வந்து செல்கின்றன. ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பள்ளி கல்லூரி மாணவ,மாணவிகள் இப்பேருந்து நிலையங்களை பயன்படுத்தி வரும் நிலையில் நிழற்குடை, இருக்கைகள், குடிநீர் வசதி, நல்ல சாலை வசதி, இலவச கழிப்பறை வசதி  போன்றவைகள் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைகின்றார்கள். மயிலாடுதுறையில் உள்ள இரண்டு பேருந்து நிலையத்தை பொறுத்தவரை கட்டணமில்லா கழிவறை இயங்காததால் கூடுதல் கட்டணம் கொடுத்து கழிவறைக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதுவரை தனியார் ஒப்பந்ததாரர்கள் நிர்வகித்து வந்த கழிவறை தற்பொழுது நகராட்சி நிர்வாகத்தாலே நிர்வகிக்கப்படுகின்ற நிலையிலும் கூட அதன் கட்டணத்தை குறைத்து வசூலிக்க வேண்டும் என்பது மக்...