சத்தியமங்கலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி.


 ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், கொமாரபாளையம் ஊராட்சி பகுதி யில் அமைந்துள்ள,அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி + 1 மாணவ, மாணவியர்களுக்கு, தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி, சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் கே.சி.பி. இளங்கோ தலைமையில், கொமார பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.எம்.சரவணன் மற்றும் ,பள்ளி தலைமையாசிரியை ராதிகா மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவர் தமிழ்ச் செல்வி ஆகியோர் முன்னிலை யில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ரமேஷ்,ஊராட்சி மன்ற உறுப்பினர் எம். வடிவேலு, கொமாரபாளையம் ஊராட்சி பகுதி திமுகநிர்வாகிகள் சுரேஷ்,மாணிக்கம் மற்றும் ஊராட்சி வளர்ச்சிக் குழு உறுப்பினர் ராசு (எ) முனுசாமி, பள்ளி மாணவ,மாணவியரின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். மொத்தம் 78 மாணவ, மாணவியர்க்கு இன்று விலையில்லா  மிதிவண்டி வழங்கப் பட்டது.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்