தூத்துக்குடி வருகை தரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு திமுக சார்பில் உற்சாக வரவேற்பு- அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அறிக்கை!

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறவுள்ள பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடி வழியாக வருகை தரவுள்ளார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்து தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சரும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான அனிதா ஆர். ராதாகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வரும் பிப்ரவரி 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு நலத்திட்டங்கள் வழங்குதல், முடிவுற்ற திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்தல் மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் போன்ற நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் பங்கேற்கிறார்.  இதற்காக நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில் அவர் விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையத்திற்கு வருகை தருகிறார்.

தூத்துக்குடி விமான நிலையம் வரும் முதலமைச்சருக்கு, தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கட்சியின் அனைத்து அணி மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாகக் கலந்துகொள்ள வேண்டும் என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி