நாலரை வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 16 வயது சிறுவன் கைது

 


பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள வெங்கலம் கிராமத்தில் தனது வீட்டு அருகே விளையாடிக்கொண்டிருந்த நான்கரை வயது சிறுமியிடம் அதே ஊரை சேர்ந்த, வெங்கலம் அரசு பள்ளியில் 11ஆம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுவன், பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.இது குறித்து தனது பெற்றோரிடம் சிறுமி தெரிவித்த தகவலின் பேரில் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர்கள் அரும்பாவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.அந்த புகாரின் பேரில் போக்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள அரும்பாவூர் போலீசார் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு சிறுவனை கைது செய்து,இன்ஸ்பெக்டர் கலா தலைமையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பாதிக்கப்பட்ட சிறுமி பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்