விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிப்பு

 


 



விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்எல்ஏ ராதாமணி (வயது 70) உடல் நலக்குறைவால் கடந்த 14-ம்தேதி மரணம் அடைந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.


இந்நிலையில், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியை காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்துள்ளார். ஏற்கனவே நாங்குநேரி எம்எல்ஏ எச்.வசந்தகுமார், பதவியை ராஜினாமா செய்ததால் அந்த தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது.


இதன்மூலம், 234 தொகுதிகள் கொண்ட சட்டமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 232 ஆக குறைந்துள்ளது. எம்எல்ஏ ராதாமணி மறைவையடுத்து தமிழக சட்டப்பேரவையில் திமுகவின் பலம் 100 ஆக குறைந்துள்ளது.


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி