நெல்லையில் பதற்றம்: திமுக முன்னாள் மேயர் உள்பட 3 பேர் வெட்டி படுகொலை

நெல்லையில் திமுகவை சேர்ந்த முன்னாள்  மாநகராட்சி மேயர் உமாமகேஸ்வரி உட்பட 3 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்கான காரணம் குறித்து நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் நேரில் விசாரணை...


நெல்லை மாநகராட்சி திமுக முன்னாள் மேயராக இருந்தவர் உமாமகேஸ்வரி, மாநகராட்சியின் முதல் மேயர் இவர் தான், நெல்லை - ரெட்டியார்பட்டி அரசு பொறியியல் கல்லூரி எதிர்புறம் குடியிருந்து வருகிறார். அவருடைய கணவர் முருகசங்கரன் நெடுஞ்சாலை துறை ஓய்வு பெற்ற பொறியாளர். உமாமகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் பணிப்பெண் வீட்டில் இருக்கும் போது இன்று பிற்பகல் வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் 3 பேரையும் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி சென்றனர். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாநகர காவல்துறை ஆணையர் பாஸ்கரன், துணை ஆணையர் சரவணன் மற்றும் தடயவியல் நிபுணர்கள், மோப்பநாய் ஆகியவை வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். நகைக்காக கொலை செய்யப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல்கள் தெரிவிக்கின்றன. சொத்து பிரச்சணையா? குடும்ப தகராறா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து மேலப்பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்