நெல்லையில் பதற்றம்: திமுக முன்னாள் மேயர் உள்பட 3 பேர் வெட்டி படுகொலை

நெல்லையில் திமுகவை சேர்ந்த முன்னாள்  மாநகராட்சி மேயர் உமாமகேஸ்வரி உட்பட 3 பேர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலைக்கான காரணம் குறித்து நெல்லை மாநகர காவல்துறை ஆணையர் நேரில் விசாரணை...


நெல்லை மாநகராட்சி திமுக முன்னாள் மேயராக இருந்தவர் உமாமகேஸ்வரி, மாநகராட்சியின் முதல் மேயர் இவர் தான், நெல்லை - ரெட்டியார்பட்டி அரசு பொறியியல் கல்லூரி எதிர்புறம் குடியிருந்து வருகிறார். அவருடைய கணவர் முருகசங்கரன் நெடுஞ்சாலை துறை ஓய்வு பெற்ற பொறியாளர். உமாமகேஸ்வரி, அவரது கணவர் மற்றும் பணிப்பெண் வீட்டில் இருக்கும் போது இன்று பிற்பகல் வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் 3 பேரையும் வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பி சென்றனர். தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாநகர காவல்துறை ஆணையர் பாஸ்கரன், துணை ஆணையர் சரவணன் மற்றும் தடயவியல் நிபுணர்கள், மோப்பநாய் ஆகியவை வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். நகைக்காக கொலை செய்யப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தகவல்கள் தெரிவிக்கின்றன. சொத்து பிரச்சணையா? குடும்ப தகராறா அல்லது வேறு ஏதும் காரணமா என்பது குறித்து மேலப்பாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!