திருப்பூர் மர்ம காய்ச்சலுக்கு சிறுவன் பலி : மக்கள் மறியல்

திருப்பூரை அடுத்த வாவிபாளையம்  படையப்பா நகரை சேர்ந்த நடேசன் பனியன் தொழிலாளி, இவரது மகன் லோகேஷ் 4 வயது,  கடந்த 14 ஆம் தேதி காய்ச்சலால் அவதிப்பட்டு வந்த அவர் திருப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், காய்ச்சல் சரியாகாத காரணத்தால் கோவையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு   சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் லோகேஷ்  சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார். இதனிடையே  படையப்பா நகர் பகுதியில் குடிநீர் , சாக்கடை , என எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாத காரணத்தாலேயே நோய்த் தொற்று ஏற்படுவதாலும் இது குறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று  கூறி ஆவேசமடைந்த பொதுமக்கள், சிறுவனின் உயிரிழப்பிற்கு நியாயம் வேண்டியும்,  அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரியும்,  ஊத்துக்குளி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனால்  1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு  ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் அதிகாரிகள் அடிப்படை வசதிகளை செய்து செய்து தருவதாக உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் கைவிடப்பட்டது


Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!