பழையபாளையம் கிராமத்தில் மரக்கன்று நடும் பணி ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு

பழையபாளையம் கிராமத்தில் மரக்கன்று நடும் பணி ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்தனர்.



நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே பழையபாளையம் கிராமத்தில் ஊராட்சிக்குச் சொந்தமான பழத்தோட்டத்தில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப் புத்திட்டத்தின் கீழ் பல வகையான மரக்கன்றுகள் நடும் பணியை கொள்ளிடம் ஒன்றிய ஆணையர் சரவணன், உதவிப்பொறியாளர் வேல்கண்ணன், ஊராட்சி செயலாளர் மகேஸ்வரி ஆகியோர் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மத்திய நீர் வளத்துறை ஆதாரத்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்களும் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கும் முறைகள் பற்றி தொழிலாளார்களிடம் ஆலோசனை வழங்கினார்.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்