கடலூரில்  உலக கை கழுவும் தினவிழா

கடலூரில் 

உலக கை கழுவும் தினவிழா கொண்டாடப்பட்டது. 

 


 

கடலூர் பாதிரிக்குப்பம் குளோரி தொடக்கப்பள்ளியில் உலக கை கழுவும் தின விழா கூத்தப்பாக்கம் ரோட்டரி சங்கத்தின் சார்பாக நேற்று நடைபெற்றது.  இந்த நிகழ்ச்சிக்கு கூத்தப்பாக்கம் ரோட்டரி சங்கத்தின் தலைவர்எஸ். ராமலிங்கம் தலைமை தாங்கினார். 

செயலாளர் தட்சணாமூர்த்தி வரவேற்புரை ஆற்றினார். சிறப்பு விருந்தினராக  ரோட்டரி துணை ஆளுநர் பி அப்பர் சாமி கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். 

 

உலக கை கழுவும் தின விழாவில் மாணவ மாணவிகளுக்கு கூத்தப்பாக்கம் கண் அறுவை சிகிச்சை மருத்துவர் வி .எஸ். வசந்தகுமார் செய்முறை விளக்கப் பயிற்சி அளித்தார்.  இந்நிகழ்ச்சியில் ரோட்டரி சங்கம் ராதாகிருஷ்ணன் தாயுமானவன் பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். இறுதியில் கூத்தப்பாக்கம் ரோட்டரி சங்க நிர்வாகி 

எஸ். பாஸ்கரன் நன்றி கூறினார்.

 

 

 

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!