நத்தம் அருகே புதிய சமுதாய கூடம் கட்ட பூமிபூஜை ஆண்டிஅம்பலம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

நத்தம் அருகே புதிய சமுதாய கூடம் கட்ட பூமிபூஜை ஆண்டிஅம்பலம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.




திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே கோசுகுறிச்சி ஊராட்சியைச் சேர்ந்தது கருத்தலக்கம்பட்டி கிராமம் ஆகும். இந்த கிராமத்தில் சமுதாய கூடம் வேண்டும் என்று நத்தம் எம்.எல்.ஏ. ஆண்டி அம்பலத்திடம் கிராம மக்கள் கோரிக்கை மனு கொடுத்தனர். இதை பரிசீலித்த அவர் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.25லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தார்.அதன்பேரில் அதற்கான பூமிபூஜை நேற்று கருத்தலக்கம்பட்டி விநாயகர் கோயில் அருகில் நடந்தது. ஆண்டிஅம்பலம் எம்எல்ஏ தலைமை தாங்கி பூமிபூஜையை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் வடக்கு ஒன்றியசெயலாளர் வெள்ளைச்சாமி, ஊராட்சி செயலாளர் கலிபுல்லா, ஊர் அம்பலம் ரவிக்குமார், மணிவண்ணன் மற்றும் ஊர்முக்கியஸ்தர்கள், பொறுப்பாளர்கள், கிராம மக்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்