வேகமாக பரவும் கொரோனா...38 பேர் பலி...1,974 பேருக்கு தொற்று...

தமிழகத்தில் இன்று மட்டும் 1974 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மொத்த எண்ணிக்கை 44,661 ஆனது.


இன்று மட்டும் 18,782 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. மொத்தமாக 7,10,599 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. 


இதில் 19,676 பேர் ஆஸ்பத்திரிகளில சிகிச்சை பெற்று வருகிறார்கள். 24,547 பேர் சிகிச்சை முடிந்து வீடுகளுக்கு சென்று உள்ளனர்.


கொரோனா தொற்றுக்கு இன்று தான் அதிகபட்சமாக 38 பேர் பலியாகி உள்ளனர்.இதுவரை 435 பேர் பலியாகி உள்ளனர்.


சென்னையில் அதிகபட்சமாக 1,415 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. அடுத்தபடியாக செங் கல்பட்டில் 178 பேருக்கு நோய் உறுதி செய்யப்பட்டு உள்ளது.


 


Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்