கோவில்பட்டியில் வட்டார அளவிலான ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்.!


சமூக பாதுகாப்புத் துறையின்  தூத்துக்குடி மாவட்ட  ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் 3 மாதங்களுக்கு ஒருமுறை வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் ஒவ்வொரு வட்டாரத்திலும் நடைபெற்று வருகிறது.

அதன் அடிப்படையில் இன்று கோவில்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வைத்து ஒன்றிய தலைவர் கஸ்தூரி சுப்புராஜ்  தலைமையிலும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன்  (திட்டம் ),ஸ்ரீனிவாசன் (கிராம ஊராட்சி), துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தனலட்சுமி, முத்துபாண்டியன்  முன்னிலையில்  நடைபெற்றது.

கூட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு, குழந்தைகள் உரிமைகள், குழந்தை தத்தெடுப்பு, குழந்தைகளுக்கு எதிரான பிரச்சனைகள் குறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பாதுகாப்பு அலுவலர்சுரேத்து வாணி  சிறப்புரையாற்றினார்.

மேலும் கூட்டத்தில் கூட்டத்தின் உறுப்பினர்கள் தொழிலாளர் துணை ஆய்வாளர், சைல்ட் லைன் உறுப்பினர் கனகவள்ளி ஆகியோர் கலந்து கொண்டனர்

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி