தூத்துக்குடியில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி - ஆட்சியர் செந்தில்ராஜ் துவக்கி வைத்தார்.!


தூத்துக்குடி மில்லர்புரம் பி.எம்.சி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தூத்துக்குடி வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சார்பில் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் இன்று நடைபெற்றது. 

இம்முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ், துவக்கி வைத்தார். மாநகராட்சி ஆணையர் சாருஸ்ரீ, முன்னிலை வகித்தார். 

நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலர் விநாயகம், சுகாதார பணிகள் துணை இயக்குநர் மரு.போஸ்கோ ராஜா, மாநகராட்சி நகர்நல அலுவலர் மரு.வித்யா, போக்குவரத்து ஆய்வாளர் பெலிக்ஸ் மாசிலாமணி, வட்டாட்சியர் ஜஸ்டின், பிஎம்சி பள்ளி முதல்வர் கென்னடி மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்