விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் பிராணவாயு கூடம் - கனிமொழி கருணாநிதி எம்.பி திறந்து வைத்தார்.!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் ஏகம் பவுண்டேஷன் சமூக பொறுப்பு நிதியிலிருந்து 40 லட்சம் மதிப்பிலான 22 எண்ணிக்கை கொண்ட ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் பிராணவாயு அறையின் திறப்பு விழா இன்று நடைபெற்றது

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் முன்னிலையில் திமுக மகளிர் அணி செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு 

ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் பிராணவாயு அறைகளை திறந்து வைத்து பார்வையிட்டார் மேலும் அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்தார்.

நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் பயிற்சி ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன் கோவில்பட்டி கோட்டாட்சியர் சங்கரநாராயணன்,இணை இயக்குநர் நலப்பணிகள் மருத்துவர் முருகவேல்,வட்டார மருத்துவ அலுவலர் மகாலட்சுமி, சித்த மருத்துவர் தமிழ்அமுதன், 

குழந்தைகள் நல மருத்துவர் திவ்யா, பல் மருத்துவர் முத்துவள்ளி,செவிலியர் கண்காணிப்பாளர் வேலம்மாள், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி மற்றும் செவிலியர்கள் அனைத்து பணியாளர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அழைத்து வர வேண்டும்... அதுவரைவெற்றிப்பயணத்தில் கலந்து கொள்ள மாட்டேன்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி