visa-on-arrival -இந்தியர்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்க யுஏஇ முடிவு.!


இந்தியர்கள் மற்றும் இந்தியாவில் இரண்டு வாரங்கள்  தங்கிவிட்டு வருபவர்களுக்கு, வருகையின் போது வழங்கும் visa-on-arrival வசதி கிடையாது என யுஏஇ அறிவித்துள்ளது. 

இந்த வசதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க யுஏஇ அரசு முடிவு செய்துள்ளது என அந்நாட்டின் தேசிய விமான நிறுவனமான எத்திஹாட் தெரிவித்துள்ளது.இலங்கை , பாகிஸ்தான் உள்ளிட்ட வேறு பல நாட்டவருக்கும் இந்த வசதி தற்போது கிடைக்காது. 

அமெரிக்க-பிரிட்டன் விசாக்கள், கிரீன் கார்ட், ஐரோப்பிய ஒன்றிய ரெசிடன்ட் பெர்மிட் வைத்திருக்கும் இந்தியர்களுக்கு வருகையின் போது விசா வழங்கும் வசதி உண்டு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்