சீனாவில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மூவர் பலி.!



சீனாவின் லூசோ பகுதியில் இன்று அதிகாலை ரிக்டர் அளவில் 6.0 ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டட இடிபாடுகளில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து, சீனாவின் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளதாவது: சீனாவின் லூசோ பகுதியில் இன்று (செப்., 16) அதிகாலை 4:33 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆகப் பதிவானது.

இந்த நிலநடுக்கத்தால் லூசோ பகுதியில் உள்ள கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டது. வீட்டின் கூரைகள் சரிந்தன. இடிபாடுகளில் சிக்கி மூவர் பலியாகினர். மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தற்போது மாகாண அரசு நிலநடுக்க எச்சரிக்கை விடுத்ததோடு, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டடங்கள் இடிந்துள்ளதால் அதில் சிக்கியவர்களில் மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்