பாரத ஸ்டேட் வங்கி மற்றும் மாவட்டங்களில் உள்ள அனைத்து வங்கிகள் இணைந்து நடத்திய மாபெரும் லோன் மேளா - கனிமொழி கருணாநிதி எம்.பி துவக்கி வைத்தார்.!


பாரத ஸ்டேட் வங்கி மற்றும் மாவட்டத்திலுள்ள பல்வேறு முன்னனி வங்கிகள் இணைந்து நடத்திய மாபெரும் லோன் மேளா தூத்துக்குடி உள்ள ஏ.வி.எம் கமலவெல் மஹாலில் வைத்து இன்று காலை நடைபெற்றது.

முகாமை திமுக மகளிரணிச் செயலாளரும், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கருணாநிதி தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு கடன் ஆவணங்களை வழங்கினார்.





இம்முகாம் இரவு 8 மணி வரை நடைபெற உள்ளது.  இதில், விவசாயக் கடன், பிரதமர்  முத்ரா கடன், கல்விக் கடன், வீட்டுக் கடன், வாகனக் கடன், தனிநபர் கடன், சிறு, குறு தொழில் கடன், மற்றும் சமூக பாதுகாப்பு திட்டங்களான பிரதம மந்திரி சுரக்ஷா  பீமா யோஜனா, ஜீவன் ஜோதி பீமா யோஜனா, அடல் பென்சன் யோஜனா, போன்ற திட்பங்களில் இணைந்து பயன் பெறுவதற்கான  வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது. 

இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் மீன்வளம் மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ்,

பாரத ஸ்டேட் வங்கி முதன்மை பொது மேலாளர் ராதாகிருஷ்ணன் , நபார்டு தூத்துக்குடி மேலாளர் சுரேஷ் ராமலிங்கம், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!