தமிழ்நாடு ஊரகவளர்ச்சித்துறை சங்கங்களின் சார்பாக கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.!


ஊராட்சியில் பணியாற்றி வரும் ஊராட்சி மேல்நிலைத்தொட்டி இயக்குபவர்களுக்கு பிறப்பிக்கப்பட்ட புதிய அரசாணையை ரத்து செய்திட வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் ஒரே மாதிரி ஊதியம் வழங்க. வேண்டும்.30 ஆண்டு பணியை கருத்தில் கொண்டு சிறப்பு ஊதியம் பணிக்கொடை ஓய்வூதியம் வழங்க வேண்டும் 

கிராம ஊராட்சிகளில் ஊராட்சி மன்றத்தலைவர்கள் ஊராட்சி செயலர்களுக்கு மாத ஊதியம் அரசு கருவுலத்தில் வழங்க வேண்டும்.பதிவுறு எழுத்தர்களுக்கு அரசு சலுகைகளையும் பணிகாலத்தில் கருத்தில் கொண்டு தேர்வு நிலை சிறப்பு நிலை ஊதியம் வழங்க வேண்டும்.

கிராம ஊராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு கால ஊதியம் வழங்கவேண்டும் இன்னும் பல கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈர்ப்பு நடவடிக்கை நடைபெற்றது.இதில் முருகன் மாநில பொது செயலாளர் மகேஸ்வரன் மாநில பொருளாளர் செல்வம் மேற்கு மண்டலம் சிறப்பு 

அழைப்பாளர் பழனிவேல் மாவட்டத்தலைவர் சிவசங்கர் கிழக்கு மாவட்ட தலைவர் சரவணன் மேற்கு மாவட்ட தலைவர் ஈஸ்வரன் மணிவேல் வேல்முருகன் கோவைமுத்து ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்