அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு திமுக இளைஞரணி சார்பில் தங்க மோதிரம்.!


உதயநிதி ஸ்டாலின் 44 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நகர திமுக இளைஞரணி சார்பில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி செயலாளர் மதியழகன் தலைமையில் நகர இளைஞர் அணி  அமைப்பாளர் கே.மகேந்திரன், சிறுபான்மையினர் நல உரிமை அணி துணை அமைப்பாளர் அமலி பிரகாஷ் ஆகியோர் முன்னிலையில்

கோவில்பட்டி நகர திமுக செயலாளர் கருணாநிதி கலந்துகொண்டு அரசு மருத்துவமனையில் பிறந்த 16 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து தாய்மார்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட, நகர,ஒன்றிய திமுக நிர்வாகிகள் சேதுரத்தினம், ராஜகுரு,கணேசன், முனியசாமி, காளியப்பன், அன்பழகன்,ராமமூர்த்தி, மாரிச்சாமி, ரவீந்திரன்,மணி, அண்ணாதுரை, புஷ்பராஜ்,சசிகுமார்,சரவண குமார்,ஹரிஹரன், டீக்கடை சந்திரசேகர், மகேஷ் ராசுக்குட்டி, பூக்கடை கண்ணன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்