அரியப்பம்பாளையம் பேரூராட்சி பகுதி வார்டு உறுப்பினர்க்கு போட்டியிட அதிமுக சார்பில் விருப்பமனு.


சத்தியமங்கலம். நவ.30

தமிழகம் முழுவதும் விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது என்ற அறிவிப்பு கேட்ப, அரசியல் கட்சிகள் பேரூராட்சி மாநகராட்சி, நகராட்சிஉள்ளிட்ட பகுதிகளில் தங்கள் கட்சியின் சார்பில் போட்டியிட விருப்பமுள்ளவர் களிடம்  விருப்ப மனு பெற்று வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சத்தியமங்கலம் அரியப்பம்பாளையம் பேரூராட்சி  வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட அதிமுக சார்பில்  விருப்ப  மனுவினை அ.இ. அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் என். என். சிவராஜ் மற்றும் அரியப்பம்பாளையம் பேரூர் கழக அதிமுக செயலா ளர் தேவமுத்து ஆகியோரிடம் விருப்பமனுவினைஅளித்து வருகின்றனர். 

அப்போது  சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய,முன்னாள் சேர்மன்.எம்.பி.  துரைசாமி, அரியப்பம்பாளையம் பேரூராட்சி, முன்னாள் சேர்மேன் துரைசாமி, முன்னாள் உப தலைவர் சுந்தரம், சோனா சேகர், கேபிள் சரவணன், அரியப்பம்பாளையம் பேரூராட்சி அம்மா பேரவை செயலாளர் மிலிட்டர சரவணன் உள்ளிட்டோர்உடன்இருந்தனர்.


தமிழ் அஞ்சல் செய்திகளுக்காக,

கி.நாராயணசாமி,

செய்தியாளர்,

சத்தியமங்கலம்.

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்