ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், புன்செய் புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் மற்றும் அரசியல் கட்சியினர் இன்று உண்ணாவிரத அறப் போராட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தனர் காலை முதலே,போராட்டத்திற்கு ஆதரவாக, பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டன. உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர் களை போலீசார் கைது செய்தனர். புன்செய் புளியம்பட்டி நகராட்சி நிர்வாகம் ,மழை நீர் ஓடையின் குறுக்கே,, கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும், மந்தை நிலத்தை ஆக்கிரமித்து. வணிக வளாகமும் கட்டுவதை கண்டித்தும், நகராட்சி பகுதி 16 வது வார்டில், சந்தை வளாகத்தில், கொட்டப்பட்டுள்ள, குப்பை மேட்டை அகற்ற, நகர மன்ற உறுப்பினரும் , பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் மனு அளித்து போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்தும், புளியம்பட்டி கோயில் புதூர் வண்டிப் பாதையை, சீரமைத்ததாக பொய் சொல்லும் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், சொத்து வரி,,தொழில் வரி,குப்பை வரி ஆகியவற்றை பலமடங்கு உயர்த்தியதை கண்டித்தும்,. வாரச்சந்தை தினசரி மார்க்கெட் கடைகளை தரமில்லாமல் கட்டப்பட்டுள்ளதை கண்டிப்ப...