கோவில்பட்டியில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோவில்பட்டி அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் மாதா கோவில் ரோடு படித்துறை முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட துணைத்தலைவர் தமிழரசன் தலைமை தாங்கினார். மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் விவசாயிகள் விரோத போக்கை கண்டித்தும், பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை வாபஸ் பெற வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில வழக்கறிஞர் அணி துணைச்செயலாளர் பெஞ்சமின் பிராங்கிளின், சி.ஐ.டி.யு. மாநிலக்குழு உறுப்பினர் கிருஷ்ணவேணி, ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட பொது செயலாளர் ராஜசேகரன், எல்.பி.எப். கட்டுமான தொழிலாளர் சங்க தலைவர் பரமசிவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்

Popular posts from this blog

தூத்துக்குடி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. நவீன் பாண்டியன் அவர்களிடம் தமிழ் அஞ்சல் தொழில் மலர் வழங்கப்பட்டது.

புஞ்சை புளியம்பட்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்கள் கைது - போராட்டத்திற்கு ஆதரவாக, கடைகள் அடைப்பு -

கோபியில் அடையாளம் தெரியாத இரண்டு ஆண் பிரேதங்கள்