வேளாண்மைத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் - கலெக்டர் எஸ்.வினீத் ஆய்வு

வேளாண்மை மற்றும்  உழவர் நலத்துறையின் மூலம் ரூ.8.54 இலட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து  மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.எஸ்.வினீத்   செய்தியாளர் பயனத்தின் போது ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் எஸ்.வினீத்   திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் வேளாண்மை மற்றும்  உழவர் நலத்துறையின் மூலம்  விவசாய நிலங்களில் ரூ.8.54 இலட்சம் மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து செய்தியாளர் பயனத்தின் போது ஆய்வு மேற்கொண்டார்.




இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது,
தமிழக அரசு விவசாயிகளுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக குறைந்த நீரில் அதிக மகசூல் பெற நுண்ணீர் பாசன திட்டம் சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீதம் மாணியத்திலும் மற்றும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீதம் மாணியத்திலும் செயல் பயுடுத்தப்பட்டு வருகிறது. கண்ணமநாயக்கனூர்  கிராமத்தில்    வேளாண்மை பொறியியல் துறை மூலம் விவசாயிக்கு ரூ. 3,65,295 இலட்சம் மதிப்பிட்டில் வழங்கப்பட்டுள்ள சூரிய ஒளி சக்தி மூலம் இயங்கும் மின் மோட்டார் அமைக்கப்பட்டு விவசாய பயன்பாட்டினையும், ஆலம்பாளையம் கிராமத்தில்; பிரதான் மந்திரி திட்டத்தின் மூலம் ரூ. 87,595 மதிப்பீட்டில் விவசாய நிலத்தில் அமைக்கப்பட்டுள்ள நுண்ணீர் பாசன திட்டத்தையும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையின் மூலம் விவசாய நிலத்தில்  தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் ரூ. 4.13 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள குறைந்த விலை வெங்காயம் சேமிப்பு பட்டறையையும் என மொத்தம் ரூ.8,54,272 இலட்சம் மதிப்பீட்டில் விவசாய நிலங்களில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு; வரும் வளர்ச்சி திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.எஸ்.வினீத் ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக உடுமலைப்பேட்டை உழவர் சந்தையில் வேளாண் பொருட்கள் விற்பனை செய்ய தேவையான அடிப்படை வசதிகள் குறித்து  ஆய்வு செய்து புதிய உறுப்பினர் அடையான அட்டைகளையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் செயல்படுத்தப்படும் கிராமங்களான கல்லாபுரம் பகுதி நெல் சாகுபடி விவசாயிகளுக்கு உற்பத்தியை அதிகரிக்க விவசாயிகளுக்கு  மானியத்தில் வழங்கப்படும் சிங்க் சல்பேட் மற்றும் வேளாண்மை பொறியியல் துறையின் மூலம் பண்ணைக் குருவிகள் (கடப்பாறை,கதிர்அறுவால், மண்வெட்டி, களைக்கொத்து, இரும்புச்சட்டி அடங்கிய தொகுப்பினை ஆதிதிராவிட விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.எஸ்.வினீத் வழங்கினார். இந்த ஆய்வின் போது வேளாண்மைத்துறை உதவி இயக்குநர்  தேவி, செய்தியாளர்கள் மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் உடனிருந்தனர்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!