3 வருடங்களுக்கு முன்பு காணாமல்போனவரை கண்டுபிடித்து மனைவியிடம் ஒப்படைத்த கழுகுமலை போலீசார் - எஸ்பி பாலாஜி சரவணன் பாராட்டு.!

கழுகுமலை முனியசாமி கோவில் தெருவை சேர்ந்த முத்துவேல் மகன் சின்னத்தம்பி (43) என்பவர்  கடந்த 15.08.2018 அன்று காணாமல் போனதாக அவரது மனைவி கலா (39) என்பவர் அளித்த புகாரின் பேரில கழுகுமலை காவல் நிலைய போலீசார் காணாமல் போனதாக வழக்குப் பதிவு செய்து மேற்படி காணாமல்போன சின்னத்தம்பியை விசாரணை மேற்கொண்டு தேடி வந்தனர். 

இந்நிலையில் கழுகுமலை காவல் நிலைய உதவி ஆய்வாளர் சதீஷ்குமார், தலைமை காவலர் கண்ணன் மற்றும் கழுகுமலை காவல் நிலைய தனிப்பிரிவு முதல் நிலை காவலர் சுப்புராஜ் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டபோது இன்று (29.04.2022) கோவில்பட்டி பழைய பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர் மேற்படி காணாமல்போன சின்னத்தம்பி என்பது தெரியவந்தது, உடனே போலீசார் அவரை மீட்டு நிலையம் கொண்டு வந்து அவரின் மனைவி கலாவிடம் ஒப்படைத்தனர்.

3 வருடமாக காணாமல்போன சின்னத்தம்பியை கண்டுபிடித்து மீட்டு அவரது மனைவியிடம் ஒப்படைத்த கழுகுமலை போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்  எல். பாலாஜி சரவணன்  பாராட்டினார்.

Popular posts from this blog

மணிமுத்தாறு அருவியில் குளித்த தூத்துக்குடி நபர் ஆபத்தான ஆட்கொல்லி நோய் கிருமி தாக்கி பரிதாப மரணம்.!- தாமிரபரணியில் குளிப்பது ஆபத்தானதா.!?

ரூ.7,616 இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசுப் பள்ளியின் முதல்வர் எழுதிய காசோலை - இனையத்தில் வைரலானதால் கேள்விக்குள்ளான நாட்டின் கல்வி முறை.!!

பழைய வாகனங்களுக்கு FC கட்டணம் 10 மடங்கு உயர்த்தி மத்திய அரசு உத்தரவு.!